Sunday, January 20, 2008

யோகா - ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் கண்ணோட்டம்.

முற்காலங்க‌ளிலெல்லாம் மக்களிடையே காலரா, வாந்திபேதி, நிமோனியா, தொற்றுநோய்க‌ள் என கிருமிகளினால் ப‌ர‌வும் வியாதிக‌ள் மிக அதிக அளவில் காணப்பட்டன‌. ஆனால் இந்நாட்க‌ளில் ச‌ர்க்க‌ரை, இர‌த்த‌க் கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு, ம‌ன‌ அழுத்த‌ம் போன்ற‌ வாழ்க்கைமுறை சார்ந்த (Life style diseases) வியாதிகளே அதிகமாகப் பேசப்படுகின்றன‌.


மருத்துவத் துறையின் அசூர வள‌ர்ச்சி மற்றும் தகவல் தொழில் நுட்பங்களின் பெருக்கம் மருத்துவருக்கும் நோயாளிக்குமிடையே உள்ள இடைவெளியை அதிகரிக்கச் செய்கிறது... ம‌ருத்துவ‌ச் செலவினத்தைக் கூட்டுகிற‌து... சில வேளைகளில் செல‌வு செய்ய ப‌ண‌ம் இருந்தும் செலவு செய்துகூடப் புண்ணிய‌மில்லை என மருத்துவத்துறை கைவிரிக்கும் நிலைமையில், எப்படியாயினும் தீர்வு கிடைத்து விடாதா என்ற எதிர்பார்ப்போடு மாற்று மருத்துவ முறைக‌ளில் (Alternative Medicine) நாட்ட‌ம் செலுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


மருத்துவமனைகளுக்கு வந்துசெல்லும் நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்கு இருப்பது அவரது மனரீதியான பாதிப்புகளினால் ஏற்படும் உடல்நல கோளாறுகளே. இந்நிலையில் அவர்கள் மருந்து மாத்திரகளை மறந்துவிட்டு மாற்று மருத்துவ முறைகளில் ஊக்குவிக்கப்படுவது ஒன்றும் புதிர‌ல்ல. உலகில் யோகா, ஆழ்நிலை தியானம் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மாற்று மருத்துவ முறைகள் உள்ளன. ஒருவித‌த்தில் ஆங்கில மருத்துவத்தின் (Allopathic Medicine) வ‌றைய‌றுக்க‌ப்ப‌ட்ட‌ எல்லையே யோகா போன்ற மாற்றுமுறை மருத்துவத்தின் வள‌ர்ச்சிக்கு காரணம் எனலாம்.



யோகா என்பது என்ன?


சமஸ்கிருத மொழியிலிருந்து வந்த யோகா என்ற வார்த்தைக்கு "இணைப்பு" என்று பொருள். உட‌ல் ஆச‌ன‌ நிலைக‌ள் ம‌ற்றும் மூச்சுப்பயிற்சிக‌ள் மூலம் மனிதனை இறைவனுடன் இணைக்க முற்படும் மனித முயற்சியே யோகா என்றழைக்கப்படுகிறது.

யோகா என்பது அடிப்படையில் ஒரு தனிமனித ஒழுக்கம், வாழ்க்கை முறை, சுய முன்னேற்ற கருவி, உடல் மற்றும் மனநலம் பேணும் ஒரு அறிவியல் சார்ந்த கலை, ஆன்மிக சாதனம் இப்படிப் பலராலும் பலவிதமாக கருதப்படுகிற்து. மன அமையின்மை, மன அழுத்தம், அலைச்சல், வேலைப் பளு, மாசடைந்த உணவு, சுற்றுப்புற சூழல், ஊடகங்களின் தாக்கங்கள் ஆகிய போன்ற சமுதாய சவால்களை எதிர்த்துப் போராடுவதற்கு யோகா ஒரு நல்ல ஆயுதம் என்கின்றனர்.

நம்மில் பலரும் யோகா என்றாலே, தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து வலுவினை ஊட்டும் ஒரு சாதாரணமான உடற்பயிற்சி என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அது உடற்பயிற்சிக‌ளுக்கெல்லாம் மேலான தத்துவங்களை மையமாகக் கொண்டுள்ளது.

சுமார் கி.மு. 150 வருடங்களில் உருவான பதஞ்சலி யோகசூத்திரத்தின் படி யோகாவில் யமம். நியமம், ஆசனம், பிராணயமம், பிரத்யாகரம், தாரணை, தியானம் ம‌ற்றும் சமாதி என ஆக‌ மொத்தம் எட்டுவகையான வழிமுறைகள் உண்டு. ஆனால் பிந்நாட்களில் 15 ம் நூற்றாண்டில் ஆசனம் (குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருக்கும் உடற்பயிற்சி), பிராணயமம் (சுவாசத்தை உள்ளே வெளியே இழுக்கும் மூச்சுப் பயிற்சி) என்ற இரண்டு அம்சங்களை மட்டும் உள்ளடக்கிய கதா யோகா உருவெடுத்து மற்ற மதத்தினருடன் எதிர்நோக்கும் தத்துவ தர்க்கங்களை சற்றே சாமர்த்தியமாக தவிர்த்து இன்று உலகமுழுவதிலும் பிரபலமாகி வருகிற‌து.



யோகாவின் தத்துவப் பின்னணி:


யோகா வெளிப்படையாகவே கிறிஸ்தவ தத்துவங்களுக்கு எதிரானது. மனிதனை கடவுளோடு இணைக்க முற்படும் முயற்சியே யோகா என்றறிந்தோம். கடவுளைக் குறித்த கருத்தில் இரண்டிற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது.

முப்பத்து முக்கோடி தெய்வங்களைக் கொண்ட இந்து மதக் கருத்தின் படி காண்ப‌தெல்லாம் கடவுள் தான். இறைவன் ஒரு ஆள்த்தத்துவத்தோடு இல்லாமல் ஒரு ஆன்மீக பொருளாக அண்ட சராசரத்திலுள்ள எல்லாவற்றிலும் வியாபித்துள்ளார் என அது கூறுகிறது. ஆனால் கிறிஸ்தவமோ, இறைவன் என்பவர் மனிதன் உட்பட அண்ட சராசரங்கள் அனைத்தையும் தனது வார்த்தையினால் படைத்த ஆள்த்தத்துவமுள்ள ஒருவரே என தெளிவாய் கூறுகிறது.

ம‌னிதனைக் குறித்த கருத்திலும் இரண்டிற்குமிடையே வேறுபாடு உள்ளது. காண்ப‌தெல்லாம் கடவுள் என்பதால், உடல் ஆசன மற்றும் மூச்சுப் பயிற்சிகள் மூலமாக மனிதனும் இறை நிலையை அடைகிறான் என்பது யோகாவின் கருத்து. இது "நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்" (ஆதி.3:4) என்று சாத்தான் ஏவாளை வஞ்சித்தது போல் அல்லவா உள்ளது. பரிசுத்த வேதாகமமோ மனிதன் இறைவனால் தனது சொந்த சாயலில் படைக்கப்பட்ட ஒரு படைப்பு; படைப்பும் படைத்தவரும் ஒன்றாகிவிட முடியாது என கூறுகிறது.

மனிதனின் அடிப்படை பிரச்சினையும் அதற்கான தீர்வும் குறித்த விஷயத்தில் மனிதன் தனது இறைநிலையை உணராமல் இருப்பது தான் அவன‌து அனைத்துவகையான பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதும் அத‌னை அவன் த‌னது முய‌ற்சியினால் அடைந்து விட‌லாம் என்பதும் யோகாவின் க‌ருத்து. ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌த்தின் படியோ ம‌னித‌னின் பாவ‌நிலைமையே அவன‌து பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம்; இயேசுகிறிஸ்துவின் இரத்தமே சகல பாவங்களையும் நீக்கி, அவ‌னை சுத்திகரிக்கும். இது கிருபையாய் தேவ‌னால் அருள‌ப்ப‌டும் அன்ப‌ளிப்பு; அது முய‌ற்சியினால் ச‌ம்பாதிக்க‌ இய‌லாத‌ ஒன்று.யோகா உண்மை தெய்வத்திற்குப் பதிலாக ஒருவன் தன்னையே மையப்படுத்திக் கொள்ள‌ போதிக்கிற‌து. வாழ்வின் இக்கட்டான வினாக்களுக்கு தீர்வை வேதாகமத்தில் தேடுவதைத் தடுத்து அவன் தனது மனசாட்சியையே நாடும் படி ஊக்குவிக்கிற‌து.



அதிலென்ன தவறு?


அதெல்லாம் சரி, எப்படியாயினும் யோகா ஒருவிதத்தில் நன்மையைத் தானே தருகிறது. பின்னர் அதிலென்ன தவறு; பின்னணியிலுள்ள தத்துவத்தை மட்டும் தவிர்த்து விட்டு வெறும் யோகாசன நிலையையும் உடற்பயிற்சியையும் மட்டும் எடுத்துக் கொள்வதில் தவறு இல்லையே என சிலர் கூறுவது எனது காதினுள் தொனிக்கிறது. அது சரியாக இருக்க வாய்ப்பில்லை.

அனைத்து வகையான யோகாவுமே ஆன்மீகப் பயிற்சிகளே. ஒவ்வொரு யோகாசன நிலையும் இந்து தெய்வங்களை வழிபடுவதாகும். உடல் ஆசன மற்றும் பயிற்சிகளை அவ்ற்றின் ஆன்மீக ஈடுபாடுகளிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது. இதுகுறித்து, Hinduism Today என்ற பத்திரிக்கை (April -June 2003) த‌ன‌து க‌ருத்தாக‌ "க‌தா யோகாவை இந்து ம‌தத்திலிருந்து பிரித்துப் பார்ப்ப‌து ஒரு ஏமாற்று வேலையாகும். அநேக‌ யோகா ஆசிரிய‌ர்க‌ள் அத‌ன் வேர் இந்து மத‌த்தில் இருப்பதையும் அத‌ன் ஆன்மீக‌ நோக்கத்தையும் அறியாதிருக்கிறார்கள்" என்று கூறி த‌னது ஆத‌ங்கத்தை வெளிப்ப‌டுத்தியுள்ள‌து.

உண்மை தெய்வத்தின் அருளால் வியாதிகள் அகலும் போது, தீய சக்திகளின் வல்லமையினாலும் வியாதிகள் விலகும் என்பதை ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும். அது ஆச்சரியமல்ல; ஏனெனில், சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே (2 கொரி. 11:14). எனவே வியாதியை நீக்குவதால் ஒருவர் தெய்வமாகி விட முடியாது. ஆனால், நம்முடைய தேவனோ உண்மை தெய்வமாக இருப்பதினால் தான் அவரால் சரீர சுகத்தை மட்டுமல்ல, ஆவி ஆத்துமா சரீரம் முழுவதுமான ஒரு பூரண தெய்வீக சுகத்தை அருளுகிறார். எனவே நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள் (1 யோவான் 4:1).

அது எப்படி அந்த வேலையைச் செய்கிறது என்பது மிகவும் முக்கியம். வேதாகமத்திற்கு முரண்பாடான‌ மந்திர சக்தியினால் அது நடை பெறுகிற‌தா? அப்படியெனில் அது இறுதியில் விடுதலையை அல்ல அடிமைத்தனத்தையே கொண்டு வரும். எனவே எதையும் ஏற்றுக் கொள்ளுமுன் எல்லவற்றையும் சோதிக்கும் மனப்பக்குவம் வேண்டும். அப்போது தான் நலமானதை பிடித்துக் கொள்ளமுடியும். யோகா போன்ற மாற்று மருத்துவ முறைகளில் எது நல்லது எது பொல்லாதது என தெளிவாக எளிதில் வறையறுக்க இயலாத நிலையில் ... "பொல்லாங்காய்த் 'தோன்றுகிற' எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்" என்ற‌ தார‌க‌ மந்திர‌த்தை க‌டைபிடிக்க‌ வேண்டும். விசுவாசத்தினால் வராத யாவும் பாவமே (ரோமர் 14:23). எனவே சந்தேகத்திற்கிடமான செயல்களில் விலகியிருப்பது தான் நல்லது.



கிறிஸ்த‌வ‌ யோகா?


சமீப காலங்களில் உடல் மற்றும் மூச்சுப் பயிற்சியையும் வேதாகம தியானத்தையும் இணைத்து கிறிஸ்தவ யோகா என்று புதிதாக ஒன்று முளைத்திருக்கிறது. கிறிஸ்தவ யோகா என்பது அடிப்படையிலேயே ஒரு வார்த்தை முரண்பாடு. ஒருவனை கிறிஸ்தவ இந்து, இல்லையென்றால் இந்துக் கிறிஸ்தவன் என்று நம்மால் வர்ணிக்க இயலுமா? ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? (யாக்கோபு 3:11). நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது என்று பரிசுத்த வேதம் தெளிவாய் போதிக்கிறது.(மத். 7:18). எனவே யோகா என்ற மரத்தின் வேர் ஆதாரத்தை எண்ணிப் பார்க்க வேன்டியது மிகவும் அவசியம்.

சுவிசேசத்தை பிரசங்கியுங்கள்... வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்குங்கள்... இதுவே பன்னிரு சீடர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளையின் வரிசை(மத். 10:7,8). ச‌ரீர நலனில் காட்டும் அக்கறையைக் காட்டிலும் ஆன்மீக‌ ந‌ல‌னே மிக‌வும் முக்கிய‌ம். ஏனெனில், ச‌ரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது (1 தீமோ 4:8).




வேத‌ம் நமது தியான‌மாக‌ட்டும்; ஜெபம் நமது பயிற்சியாகட்டும்:



வேதாக‌ம‌த்தின் ப‌டி தியான‌ம் என்ப‌து பரிசுத்த வேதத்தில் வெளிப்ப‌டுத்தப்ப‌ட்டுள்ள‌ ச‌த்திய‌ங்க‌ள் எந்த‌ அள‌விற்கு நமக்கு ச‌ம்பந்த‌ப்ப‌ட்ட‌வை என‌ சிந்த‌னை செய்து அவற்றை நமதாக்கிக் கொள்லுத‌லைக் குறிக்கிற‌து. தாவீதின் தியான‌ங்க‌ள் ச‌ங். 119 முழுவதிலும் தெளிவாய் திரும்ப‌த் திரும்ப‌ வெளிப்ப‌டுகின்ற‌ன. வேத வாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிற ப‌டியால் (2 தீமோ. 3:16) அவையாவும் நிச்சயமாக நாம் தியானிக்க‌த் த‌குந்த‌வையே.

வேத‌த்தின் மூல‌ம் தேவ‌ன் ந‌ம்மோடு பேசுகிறார்; ஜெப‌த்தின் மூல‌மாக‌ நாம் அவ‌ரோடு உற‌வாடுகிறோம். இக்கட்டான சூழ்நிலைகளில் கூட‌ தானியேல், தன் மேலறையிலே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான் என்பதை அறிவோம். நமது பிரச்சினைகளை இறைவனிடம் எடுத்துக் கூறி உரிய தீர்வைப் பெற்றுக் கொள்ள ஜெபமே சிறந்த‌ பயிற்சியாகும்.

"போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்" என்று தீர்மனித்த பவுலைப் போன்று நாமும் தெளிவுள்ளவர்களாய் மற்ற சக விசுவாசிகளுக்கு எந்த விதத்திலும் இடறலாயிராமல் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவோம்; வழி நடத்துவோம்.


அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, அவருடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை (ரோமர். 12:1).


[ இது "உன்னத சிறகுகள்" என்னும் (அக்டோபர்- டிசம்பர் 2007) காலாண்டிதழில்
வெளியாகியுள்ள எனது கட்டுரை. ]

இந்த கட்டுரையை இங்கே ஆங்கிலத்தில் படித்து ,  தமிழ் அறியாத தங்கள் நண்பர்களுடனும் பகிந்து கொள்ளலாம்.

Tuesday, October 16, 2007

முழு பெலத்தோடு அன்புகூறுதல்

"உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழுஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பெலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை." மாற்கு 12:31


முழு பெலத்தோடு அன்பு கூறுதல் என்றால் என்ன என்பது எனக்கு வெகு நாளாகவே யோசனையாக இருந்து கொண்டிருந்தது. 7 வருங்களுக்கு முன் எனது வாழ்க்கையில் எற்பட்ட அனுபவத்தின் மூலம் ஒரு நாள் தேவன் இதனை உணர்த்தினார். அதனை இங்கே பதிவு செய்கிறேன்.



கல்லூரி நாட்களில் நான் இந்திய நற்செய்தி மாணவர் மன்றம் என்ற இயக்கத்தில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்தேன். நகர அளவில் செயல்படும் அனைத்துக் கல்லூரி நற்செய்தி மாணவர் மன்றத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்ததால், நான் ஒரு குறிப்பிட்ட ஞாயிற்றுக் கிழமை மாநில அளவில் நடைபெற்ற REVIEW MEETல் கலந்து கொள்ள வேண்டியிருந்தது.



நான் அந்நாட்களில் பயிற்சி மருத்துவராக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பிரசவ அறையில் ( labour Room ) 12 மணிநேர Duty ல் (இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை) இருந்தேன். ஒரு நிமிடம் கூட தூங்குவதற்கு வாய்ப்பே கிடையாது. அவ்வளவு பிஸியாக இருந்தது. என‌வே Duty முடித்த‌ பின்ன‌ர் ஆயத்த‌ம் செய்து விட்டு நேர‌டியாக‌ திருச்சியிலுள்ள‌ மாநில‌ அலுவ‌ல‌க‌த்திற்கு வந்து சேர்ந்தேன். அன்றைய‌ ப‌ணிக‌ளை மாலை வரை முடித்து விட்டு நேர‌டியாக‌ திரும்ப‌வும் பிர‌ச‌வ‌ அறையில் என‌து ப‌ணியினைத் தொடர்ந்தேன்.




ப‌ஸ்ஸில் ப‌ய‌ண‌ம் செய்த‌ நேரம் தான் நான் தூங்கின‌ நேர‌ம். ஞாயிற்றுக்கிழ‌மை அலுவ‌லின் ஆய‌த்த வேலைகளில் ஈடுபட்டு முந்தின‌ ப‌க‌லும் தூங்க‌வில்லை. என‌வே ஞாயிறு ந‌ள்ளிர‌விற்குப் பின் என்னால் தாக்குப்பிடிக்க‌ முடிய‌வில்லை.




அத்த‌னை நாளும் பொறுப்பாக‌ ப‌ணியினைச் செய்து அன்று ம‌ட்டும் வ‌ழ‌க்க‌த்திற்கு மாறாக‌ ப‌ணியினை ச‌ரிவ‌ர‌ செய்யாத‌தை‌ க‌வ‌னித்த‌ முதுநிலை பெண்ம‌ருத்துவ‌ர் என்னிட‌ம் கார‌ண‌த்தை வின‌வினார். நானும் உண்மையைச் சொல்லிவிட்டேன். அப்போது அவ‌ர்க‌ள் சொன்னார்க‌ள்: "ந‌ன்றாக‌ ரெஸ்ட் எடுத்து விட்டு திரும்ப‌வும் க‌டைமையைச் செய்வ‌த‌ற்குத் தானே 12 ம‌ணிநேர‌ இடைவேளை கொடுக்க‌ப்பட்டிருக்கிற‌து. நீ இப்ப‌டி செய்தால் எப்ப‌டி?". க‌டமைக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌ வேண்டும், அத‌ற்குப் பின் நேர‌ம் கிடைத்தால் தான் பொழுது போக்குக் காரிய‌ங்க‌ளுக்கெல்லாம் நேர‌ம் கொடுக்க‌ வேண்டும் என்று தொடர்ந்தது அவ‌ர்க‌ளின் வாத‌ம். அவ‌ர்க‌ள் கிறிஸ்த‌வ‌ர‌ல்லாத‌வரான‌ ப‌டியால் நான் அவ‌ர்க‌ளிட‌ம் நியாய‌ப்படுத்த‌வும் இல்லை; வாக்குவாத‌ம் செய்ய‌வும் இல்லை.




முழு பெலத்தோடு அன்பு கூறுதல் என்றால் என்ன என்று ச‌மீப‌த்தில் சிந்த‌னை செய்து கொண்டிருந்த‌ போது தேவன் இப்ப‌டியாக‌ உணர்த்தினார்:




திங்க‌ட்கிழ‌மை ஒரு அவ‌சிய‌மான‌ வேலை இருப்பின், ஞாயிற்றுக்கிழ‌மை இர‌வு கொஞ்ச‌ம் சீக்கிர‌மாக‌வே ப‌டுக்கைக்குச் செல்கிறோம்; அப்போது தான் ம‌ன‌து தெளிவாக‌ இருந்து காரிய‌த்தை ந‌ல்ல‌ முறையில் செய்யமுடியும் என‌ நினைத்து நாம் அப்ப‌டி ந‌ம்மை ஆய‌த்த‌ப்ப‌டுத்திக் கொள்கிறோம்....... ஆனால், அதே வித‌மாக‌ ஞாயிற்ருக்கிழ‌மை ஆராத‌னை, ஊழிய‌ காரிய‌ங்க‌ளுக்காக‌ ச‌னிக்கிழ‌மை இர‌வு கொஞ்ச‌ம் சீக்கிர‌மாக‌வே ப‌டுக்கைக்குச் செல்கிறோமா? இல்லையே... முடிக்க வேண்டிய‌ வேண்டிய‌ எல்லா வேலைக‌ளையும் முடித்து விட்டு‌ பின்ன‌ர‌வில் ப‌டுக்கைகுச் சென்று, ஞாயிற்றுக்கிழ‌மை தாம‌த‌மாக‌ எழும்பி ஒன்று ச‌பை ஆராத‌னைக்கு முழுக்கு போட்டு விடுகிறோம் அல்ல‌து தாமத‌மாக‌ ஆராத‌னைக்குச் சென்று அதிலும் தூங்கி வ‌ழிகிறோம். இப்போது சொல்லுங்க‌ள் எங்கே ந‌ம‌து PRIORITY (முன்தெரிவு) என்று?




இதுபோன்றே தான் ந‌ம‌து வேத‌ வாசிப்பு, ஜெப‌ம், விசுவாசிக‌ளோடு ஐக்கிய‌ம் இவைக‌ளையெல்லெம் க‌ளைத்துப் போன‌பின் க‌ட‌மைக்காக‌ செய்வோமா‌னால், ந‌ம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.



" நான் என் தேவனாகிய கர்த்தரிடத்தில் என் முழு இருதயத்தோடும், என் முழுஆத்துமாவோடும், என் முழு மனதோடும், என் முழுப் பெலத்தோடும் அன்பு கூறுகிறேனா?"




...

Monday, October 08, 2007

எவ்வளவு நேரம் ஜெபிப்பது?

தமிழ்க் கிறிஸ்தவர்களின் தளத்தில் ஒரு நண்பர் இப்படியாக ஒரு கேள்வியைக் கேட்டிருந்தார்.

"5 நிமிட மட்டும் ஜெபம் செய்தல் சரியா தவறா ?"

நான் கீழ்க்கண்டவாறு எனது பதிலைப் பதித்தேன்.


"5 நிமிட மட்டும் ஜெபம் செய்தல் சரியா தவறா ?"


எனது பதில் சரி தான் என்பதே. காரணத்தைக் கூறுகிறேன், கவனமாக சிந்தியுங்கள்.

இடைவிடாமல் ஜெபிக்கணும்; சோர்ந்து போகாமல் ஜெபிக்கணும்; அதிகாலை, இருட்டோடே, என பல விளக்கங்களை பல காலமாக கேட்டுவரும் நமது நிலைமை எப்படி உள்ளது? நேர்மையாக நம்மை பரிசோதனை செய்து பார்ப்போம்... ந‌ம்மில் ப‌ல‌ருக்கு சந்தேகம் தான் என்ப‌து என‌து க‌ணிப்பு.

வேறு வேலைகள் இல்லையா? இன்று ப‌ல‌ ம‌ணித்துளிக‌ள் நான் ஊழிய‌ காரிய‌ங்க‌ளில் தானே செல‌வு செய்திருக்கிறேன்; என‌வெ இப்பொது ஜெப‌ம் செய்ய‌ விட்டாலும் தேவ‌ன் த‌ப்பாக‌ எடுத்துக் கொள்ள‌மாட்டார் என ந‌ம‌க்குள்ளே சுய‌திருப்தி என‌ சில‌ ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளினால் ந‌ம்மில் ப‌ல‌ர் அதிக‌மான‌ நேர‌ம் ஜெபிப்ப‌தில்லை.


வேதாக‌ம‌த்தில் எங்குமே ஜெப‌த்தை குறித்த உன்ன‌த‌மான‌ உய‌ர்ந்த ப‌ட்ச‌ அள‌வீடுக‌ள் தான் குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. குறைந்த‌ப‌ட்ச‌ வ‌ரைய‌றை என்று எதுவுமே சொல்ல‌ப்படுவ‌தில்லை. இதிலிருந்து விள‌ங்கிக்கொள்வ‌து என்ன‌வென்றால் ஜெப‌த்தில் எப்போதுமே உய‌ர்ந்த‌ ஒரு நிலைமையை நாட வேண்டும்.


என்ன‌, பேதுரு சேம் சைடு கோல் அடிப்ப‌து போல் உள்ள‌தே என‌ சில‌ர் கூறுவ‌து என் காதில் விழுகிற‌து. என‌து க‌ருத்தை க‌வ‌ன‌மாக‌ க‌வ‌னியுங்க‌.


"எப்ப‌டி வேண்டுமானாலும் ஜெபிக்க‌லாம்; எங்கு வேண்டுமானாலும் ஜெபிக்க‌லாம்; எப்பொழுது வேண்டுமானாலும் ஜெபிக்க‌லாம் என்ப‌தால், ந‌ம்மில் ப‌ல‌ர் எப்பொழுதுமே எங்குமே எப்ப‌டியுமே ஜெபிப்ப‌தில்லை" என்ற‌ வாக்கிய‌த்தை நீங்க‌ள் எங்கேயாவ‌து கேள்விப் ப்ட்டிருக்க‌க்கூடும்.


அதுபோல‌வே, இவ்வளவு நேரம் ஜெபிக்க வேண்டும் என்ற வறையறை எதுவும் இல்லமல், எவ்வ‌ள‌வு நேர‌மானாலும் ஜெபிக்கலாம் என்பதால் நம்மில் பலர் கொஞ்ச நேரம் கூட ஜெபிப்பதில்லை.


குடும்ப ஜெபம், 3 வேளையும் சாப்பிடுமுன்ன‌ர், வீட்டை விட்டு வெளியே கிள‌ம்புமுன்ன‌ர், வீட்டிற்கு வ‌ந்த‌ பின்ன‌ர், முக்கியமான நேரங்களில், சிக்க‌லான‌ சூழ்நிலையில் என‌ நாம் ஒவ்வொரு நாளும் ஜெபித்தாலே குறைந்த பட்சம் போதுமான‌து. Something is better than Nothing!


என‌வே 5 நிமிட‌ம் ம‌ட்டும் ஜெபிப்ப‌து என்ப‌தில் எந்த‌ த‌வ‌றும் இல்லை என‌ப‌து எனது வாத‌ம். ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு வ‌ழிவிடுகிறேன்.


இது போன்று மற்ற கிறிஸ்தவ சகோதரர்களின் கருத்தினை அறிய இங்கு செல்லவும்: http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=4624#4624

Friday, July 20, 2007

ஆபிரகாமும் லோத்துவும்






எனதருமை இருபால் தள நண்பர்களே..... வணக்கம்.


நீங்க மேலே பார்க்கிற படம், இன்று சில சூழ்நிலைகளினால் சற்றே கிடைத்த ஓய்வு நேரத்தில், நான் எனது கிறிஸ்தவரல்லாத நண்பருடன் அவரது தோப்பில் உரையாடி ஓய்வெடுக்கும் போது, ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை இந்த‌ காட்சியின் மூலம் அவர் எனக்கு சுட்டிக் காட்ட, உங்களுக்கெனெ அதை அப்படியே 'கிளிக்' செய்து, நமது தளத்தில் ஏற்றியுள்ளேன்.



இது என்ன வழக்கமாக பார்க்கிற ஒரு சீன் தானே.. இதில் என்ன விசேஷம் என நினைக்கிறீர்களா... உங்கள் நினைப்பில் தவறே இல்லை....


ஆனால், சற்று நேரம் இந்த படத்தை ஆராய்ச்சி செய்து, நீங்க கண்டுபிடிக்கும் ஆவிக்குரிய கருத்துக்களை பதிவு செய்யுங்க...




ந‌ல்ல‌ க‌ருத்துக‌ளுக்கு த‌க்க‌ சன்மான‌ம் ம‌றுமையில் ஆண்ட‌வ‌ரின் கையால் கொடுக்க‌ப்ப‌டும். முயலுங்களேன்.....

Tuesday, May 29, 2007

THE 80 / 20 MAGIC

INDIA YOUTH FOR CHRIST ன் இரு மாதங்களுக்கொருமுறை வெளிவரும் YOUTH TOUCH Magazine, May-June 2007 இதழில் வெளியான கீழ்க்கண்ட குறிப்பு எனக்கு ஆச்சரியமூட்டுவதாகவும் சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது.


"Well known Economist Pareto discerned 13 principal ternds in our wide range of activities, which is now hailed as Pareto Principle. We are re-printing these findings of his, which makes interesting reading.



1) 80 percent of results come from 20 percent of efforts.

2) 80 percent of activity will require 20 percent resources

3) 80 percent of usages is by 20 percent resources

4) 80 percent of the difficulty in achieving something lies in 20 percent of the challenge

5) 80 percent of revenue come from 20 percent of customers

6) 80 percent of problems comes from 20 percent of causes

7) 80 percent of profit comes from 20 percent of product range

8) 80 percent of complaints come from 20 percent of customers

9) 80 percent of sales come from 20 percent sales people

10) 80 percent of corporate pollution comes from 20 percent of corporations

11) 80 percent of work absence is due to 20 percent of staff

12) 80 percent of road traffic accidents are caused by 20 percent of drivers

13) 80 percent of restaurant's turn over comes from 20 percent of its menu"



YOUTH TOUCH EDITORS TAKE THE LIBERTY OF ADDING ANOTHER OBSERVATION:


14) 80 percent of Missionary work in india is done by only 20 percent of Christians (or even less !)



நானும் சந்தடிச் சாக்கில் நான் கண்ட உண்மையை இந்தப் பட்டியலில் சேர்த்திட துணிந்தேன்:



15) 80 percent of the Indian population which lives in villages are served only by 20 percent of the Doctors.




Interstingly, the above fact which I learned from my Community Medicine subject in my UG made me think much about considering the Mission work and later helped me to choose MD (Community Medicine) as my speciality.




Dr. D. Pethuru.

Thursday, May 03, 2007

Search the Bible



cellspacing="0" cellpadding="1">










action="http://hindibible.org/biblesearch.pl">




width="119" height="37" border="0" usemap="#searchbibleMap"> height="37" border="0">

(eg. John 3:16-20)

size="8" class="testbox" >



width="24" height="16" border="0" vspace="5"
name="image">
height="79" border="0">