Wednesday, March 31, 2010

சிலுவை மரம்

சிலுவை மரம்


ன்பின்
ண்டவர்
யேசுவின்
கைச் சின்னம்.

னக்காக
ன் வருத்தி
ன்றும்
ங்கி நிற்கும்
யனைக் கொள்வாயே
ரு நாளும்
யாத
ஷதமாய்!

.

லெந்து கால உபவாசம்

லெந்து கால உபவாசம் - ஐயோ
மறந்தே போனேன் அந்த சகவாசம்
உறுத்தியது என் அடிமனசு - நிலை
நிறுத்தியது எனது பாரம்பரியம் !

எதுதான் எனது பாரம்பரியம்?
பாரம்பரியத்தைச் சாடும் பாரம்பரியம்
பாரம்பரியத்திற்கு எதிரான பாரம்பரியம்
அதுவா எனது பிரியம் ?

பாரம்பரியத்திலும் ஒன்றுமில்லை
பாரம்பரியமின்மையிலும் ஒன்றுமில்லை
எனக்கினி அவற்றில் எதுவுமில்லை
இரண்டுமே எனக்கு சரிசமமே.

இருவகை பாரம்பரியத்துக்கும்
ஒருவாறாக முழுக்கு போட்டது
இந்த லெந்து நாட்களில்
நான் அனுபவிக்கும் உபவாசம் ?!

உணவு உடையுடன் உறையுமிடம் - பிறர்க்கு
தினமும் கிடைத்திட ஆதாரமாய்
நினையே வெளிப்படை ஆக்குவதே
இறையே விரும்பிடும் உபவாசம். (ஏசாயா 58:7)

அமைதியாய் திரும்பு

அமைதி வேளையில்

ஆசையாய் நித்தமும்

இயேசுவின் பாதத்தை

ஈ போன்று மொய்த்து

உறவாடிய நாட்கள்போய்,

ஊரும் உலகமும்

எப்போதும் உணர்த்தியும்

ஏனோ இப்போது

ஐயனின் பாதத்தில்

ஒருநாள் வருவதுவும்

ஓயாத வெறுப்போ? – மனமே

ஔஷதம் தேவையேல்,

அஃதினை விரும்புவாயே.


Friday, March 05, 2010

ஜெபிக்க எது நல்ல நேரம்?

எப்போது வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்:

அதிகாலையில் - தாவீது போல
மத்தியானத்தில் - தானியேல் போல
நள்ளிரவில் - பவுலும் சீலாவும் போல
ஆபத்தில் - பேதுரு போல
துக்கத்தில் - அன்னாளைப் போல
வியாதி வருத்தங்களில் - யோபுவைப் போல
சிறுவயதில் - சாமுவேல் போல
இளமையில் - தீமோத்தேயு போல
முதிர் வயதில் - சிமியோன் போல
சாவிலும் - ஸ்தேவான் போல
வேலையைத் தொடங்கும் போது - எலியேசர் போல
வேலையை முடிக்கும் போது - சாலொமோன் போல
எந்த வேளையிலும் - இயேசுவைப் போல


எப்போது வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்; எப்படி வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்; எங்கு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம் என்பதால் நம்மில் அநேகர் எப்போதுமே, எப்படியுமே, எங்குமே ஜெபிப்பதில்லை” - யாரோ.