Wednesday, March 31, 2010

அமைதியாய் திரும்பு

அமைதி வேளையில்

ஆசையாய் நித்தமும்

இயேசுவின் பாதத்தை

ஈ போன்று மொய்த்து

உறவாடிய நாட்கள்போய்,

ஊரும் உலகமும்

எப்போதும் உணர்த்தியும்

ஏனோ இப்போது

ஐயனின் பாதத்தில்

ஒருநாள் வருவதுவும்

ஓயாத வெறுப்போ? – மனமே

ஔஷதம் தேவையேல்,

அஃதினை விரும்புவாயே.


1 comment: