Tuesday, November 28, 2017

Are you really willing and ready to meet Jesus?

In a recent Interview @ Thanthi TV, the popular musician A R Rahman when asked whom he wanted to meet in this world, he replied saying, "There is a prediction that Jesus Christ would come again to this world, may be I would love to meet Him". Both the Christianity and Islam talk about the second coming of Jesus Christ. As a Muslim he would have liked to meet Jesus, but we are not sure about what he meant by it.

There were few occasions in the life of Jesus Christ that few people wanted to see / meet him. Their intention and outcome of their meeting give an idea about what really meant to see Jesus.

In Luke 19:1-10 we see that Zacchaeus, a chief tax collector wanted to see who Jesus was. But as he was short he could not see Jesus over the crowd, he tried his own way of seeing Jesus. He ran ahead and climbed a sycamore-fig tree to see him, since Jesus was coming that way. When Jesus reached the spot, he looked up and said to him, “Zacchaeus, come down immediately. I must stay at your house today.” He came down at once and welcomed him gladly. Then what happened in the life of Zacchaeus and his family is the total transformation.

From John 1:45-51, we see that Philip from the town of Bethsaida, a new follower of Jesus whom he personally called to do so, talked about Jesus to Nathanael. Inspired by the discussion, Nathanael asked Philip, “Nazareth! Can anything good come from there?” Philip replied, “Come and see". When Jesus saw Nathanael approaching, he said of him, “Here truly is an Israelite in whom there is no deceit.” “How do you know me?” Nathanael asked. Jesus answered, “I saw you while you were still under the fig tree before Philip called you.” Then Nathanael declared, “Rabbi, you are the Son of God; you are the king of Israel.” Just by meeting Jesus for the first time, Nathanael found that Jesus was the Son of God.

In John 12:21-12, it was mentioned that some Greeks among those who went up to worship at the festival in Jerusalem wanted to meet Jesus. When Andrew and Philip told about this to Jesus, he replied, “The hour has come for the Son of Man to be glorified." And he kept on saying about the cost of discipleship, along with the prediction about his own death.

According to Luke 23:1-12 during the trial before the crucifixion of Jesus Christ, Pilate sent Jesus to Herod, as he learned that Jesus was under Herod’s jurisdiction. When Herod saw Jesus, he was greatly pleased, because for a long time he had been wanting to see him. From what he had heard about him, he hoped to see him perform a sign of some sort. He plied him with many questions, but Jesus gave him no answer. So Herod became unhappy and got irritated. When the chief priests and the teachers of the law were standing there, vehemently accusing him, Herod and his soldiers ridiculed and mocked him. Dressing him in an elegant robe, they sent him back to Pilate. That day Herod and Pilate became friends—before this they had been enemies. Herod couldn't be benefited by meeting Jesus as his intentions were wrong.

Most of the people in the world would like to see Jesus for one or other reasons. Some may not like to meet him due to some reasons. Those who met Jesus with good intentions found that he was Son of God. But when Jesus comes back, "Every eye will see him, even those who pierced him; and all peoples on earth will mourn because of him" (Rev. 1:7). No one can escape of seeing Him. Why this mourning when he comes back? He is neither going to come as He came first nor as He is at present. He will come to JUDGE us for whatever we do at present.

Are you really willing and ready to meet Him?

.

Saturday, October 28, 2017

கனியற்ற கிறிஸ்தவ வாழ்க்கை

கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள். கடந்த பத்து மாதங்களாக கனியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை என ஆரம்பித்து, பின்னர் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் என மாதமொரு ஆவியின் கனியாக இவற்றை தொடர்ச்சியாக தியானித்து வந்திருக்கிறோம். இவற்றின் மூலம் நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் அடிப்படையாக வெளிப்பட வேண்டிய பண்புகளை நன்கு அறிந்து கொண்டோம்.

இருப்பினும் நாளுக்கு நாள் புதிதாக வேண்டிய நமது ஆவிக்குரிய வாழ்க்கையில், ஒருவித சோர்வையும் முன்னேற்றமில்லாத நிலைமையும் நாம் அவ்வப்போது அனுபவிக்க நேரிடுகிறது. கனியற்ற கிறிஸ்தவ வாழ்க்கையின் காரணங்கள், அதன் ஆபத்துக்கள், அதன் நிவாரணங்கள் குறித்து இப்போது பார்ப்போம். இதுகுறித்து சிந்தித்துக் கொண்டிருந்த போது, “God loves everyone, but probably prefers "fruits of the spirit" over "religious nuts." என்ற ஒருவரிச் செய்தி என் கண்ணில் பட்டது. ”தேவன் அனைவரையும் நேசிக்கிறார்; இருப்பினும் புத்திபேதலித்த சமயப் பற்றாளர்களைக் காட்டிலும் ஆவிக்குரிய கனிகளைக் கொடுப்பவர்களுக்குத் தான் அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார்” என்பதே அந்த ஒருவரிச் செய்தி.

நாம் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாய் கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர்ந்து வரும்போது காலங்கள் செல்லச்செல்ல, நாம் கனிதரும் நிலையில் முன்னேறியிருக்கிறோமா என்று நம்மைநாமே சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது அவசியம்.  மரம் செடி கொடிகள் என்றால் அவை ஒருகட்டத்தில் அவற்றின் கனியை (பலனை) கொடுக்கும். நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் (மத்தேயு 3:10). நமது கிறிஸ்தவ வாழ்க்கையும் அப்படித்தான். கனி இல்லையேல் கதி இல்லை. திராட்சைத் தோட்டக்காரரான பரமபிதா திராசைச்செடியாகிய இயேசுகிறிஸ்துவில் கனிகொடாதிருக்கிற கொடி (நாம் தான்) எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார் (யோவான் 15:1,2). 

நம்மிடம் ஆவியின் கனி வெளிப்படுகிறதா இல்லையா என்பதை வெளியரங்கமான மாம்சத்தின் கிரியைகள் நம்மிடத்தில் காணப்படுகின்றனவா இல்லையா என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே (கலா. 5:19-21). கிறிஸ்துவை அறிந்தவர்கள் என சொல்லிக்கொள்ளும் நம்மிடத்தில் ஒருவேளை இவைகள் காணப்படுமெனில், நாம் தான் அந்த புத்திபேதலித்த சமயப் பற்றாளர்கள் (religious nuts). இந்த அவலநிலை நமக்கு வேண்டாமெனில், கனிதரும் நிலையில் நாம் முன்னேற வேண்டும்.

மரம் செடி கொடிகள் கனி கொடுக்க, அவற்றிற்கென நேரம் காலங்கள் உண்டு. ஆனால், கிறிஸ்தவ வாழ்க்கையில் அவ்விதம் நேரம் காலங்களெல்லாம் கிடையாது; அனுதினமும் கனி கொடுக்க வேண்டும். இயேசு ஒருமுறை தனது பன்னிரு சீடர்களுடன் பெத்தானியாவுக்கு பயணமான போது, அவருக்குப் பசி உண்டாயிற்று. அப்பொழுது வழியருகே இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக்காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று. சீஷர்கள் அதைக்கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப் போயிற்று என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள் (மத். 21:17-20 & மாற்கு 11:11-14). இயேசு நம்மில் கனியைத் தேடும் போது அது இல்லையெனில் நம்மால் எந்த சாக்குப் போக்கும் சொல்ல இயலாது. நிச்சயம் நாம் நித்திய நரகமான அவரது சாபத்திற்கு உள்ளாக நேரிடும்.

இனிப்பு (Sweet), புளிப்பு (Sour), காரம் (Pungent), உவர்ப்பு (Salt), துவர்ப்பு (Astringent) மற்றும் கசப்பு (Bitter) என சுவைகள் ஆறு வகைகள் இருப்பினும் நாம் உண்ணும் அனைத்து உணவிலும், இவை ஆறும் ஒருங்கே இருப்பதில்லை. ஒன்றோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட சுவையோ இருக்கலாம். ஒன்றிற்கும் மேற்பட்ட சுவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விகிதாச்சாரத்தில் கலந்திருக்கும் போது அந்த உணவின் சுவையும் தரமும் மாறுவதைக் காண்கிறோம். அதுபோலவே கனிகொடுக்கும் கிறிஸ்தவ வாழ்க்கையும். ஆவியின் கனியாகிய ஒன்பது அம்சங்களும் சூழ்நிலைகளுக்கேற்ப தேவைகளுக்கேற்ற விதவிதமான விகிதாச்சாரங்களில் ஒருங்கே வெளிப்படும் போது அது தேவனுக்கு மகிமை கொண்டுவரக்கூடிய கனிதரும் வாழ்க்கையாக அமைகிறது.

இதனை வலியுறுத்தும் விதமாக அப்போஸ்தலனாகிய பேதுரு இவ்விதம் குறிப்பிடுகிறார். ’இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்க வொட்டாது’ (2 பேதுரு 1:5-7). கனிதரும் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆவியின் கனி அம்சங்களில் ஒவ்வொன்றாக நாம் பெருகும் போது எந்த அளவில் நாம் அவற்றில் பெருகுகிறோமோ அந்த அளவுக்கு அது பூரண சுவையுள்ள கனி தரும் வாழ்க்கையாக அமையும்.

கனிதரும் கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர்ச்சி இல்லையெனில் அது வீழ்ச்சியே. ஏதோ ஒரு முறை ஏதோ ஒரு வகை கனியைக் கொடுத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு திருப்தியடைந்து விடமுடியாது. தொடர்ச்சியாக இன்னும் பல அம்சங்களில் கனிதரும் நினையில் முன்னேற வேண்டும். இல்லையெனில் நாம் இரட்சிக்கப்பட்டு பாவங்கள் மன்னிக்கப் பட்டதையும் அதன் நோக்கத்தையும் மறந்து ஒரு சாராசரி பெயர்க் கிறிஸ்தவராகவே வாழ்ந்து விடுவோம்.  இதைத் தான், 2 பேதுரு 1:9 ல் இவ்விதம் காண்கிறோம், ’இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான்’.

இந்த நிலைமை மாற நாம் செய்ய வேண்டியதென்ன? தாவீது சொன்னார்: ’கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்’ (சங். 1:2-3).  இயேசு சொன்னார்: ’என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்’ (யோவான் 15:4). பவுல் சொன்னார்: ’நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப் பழகட்டும்’ (தீத்து 3:14). ’ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்’ (எபே. 5:9).

இவ்விதம் நாம் தேவனுடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இயேசுவில் நிலைத்திருந்து நம் கனிதரும் வாழ்க்கை நமது சகல நற்குணத்திலும் சகல நற்கிரியைகளிலும் வெளிப்பட தேவன் நமக்கு உதவி செய்வாராக. ஆமென்.


[இது பாலைவனச் சத்தம் – அக்டோபர் 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]
.

Monday, September 25, 2017

ஆவியின் கனி - இச்சையடக்கம்

கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு நமது இரட்சகர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.  ஆவியின் கனி வரிசையில், கடைசி அம்சமான இச்சையடக்கத்தைக் குறித்து இந்தமாதம் தியானிப்போம். ஆவியின் கனி வரிசையில் இச்சையடக்கம் என்பது கடைசியாய் பட்டியலிடப்பட்டுள்ள காரணத்தினால், ஆவிக்குரிய வாழ்க்கையில் அதன் முக்கியத்துவத்தை ஒருபோதும் நாம் கடைநிலைக்குத் தள்ளிவிடக்கூடாது. ஏனெனில், ஆவியின் கனி என ஒரு பட்டியல் (கலா. 5:22,23) கொடுக்கப்பட முக்கியப் பின்னணியே இந்த இச்சையடக்கம் என்ற காரியம் தான் என்பதை அதன் முன்னும் பின்னும் உள்ள 14ம் மற்றும் 25ம் வசனங்களிலிருந்து தெளிவாக அறிகிறோம்.

இச்சையடக்கம் என்பது ஒருவர் தனது ஆசைகளை (தன்னை) அடக்கி கட்டுக்குள் வைத்திருப்பதாகும். ஆங்கிலத்தில் அது Self-control அல்லது Temperance என்ற வார்த்தைகளில் குறிப்பிடப்படுகிறது. இதன் கிரேக்க வார்த்தையான ‘egkrateia’ என்ற வார்த்தைக்கு ‘உள்ளான பெலன்’ என்று அர்த்தம். இச்சையடக்கமாகிய ஆவியின் கனி என்பது நமது சொந்த பக்தியினால் சக்தியினால் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்வது (சுயக்கட்டுப்பாடு) அல்ல; மாறாக, பரிசுத்த ஆவியானவர் நமது வாழ்க்கையில் செயல்படுவதினால் நம் வாழ்க்கையில் வெளிப்படும் வெளிப்படையான அம்சமாகும். சுயத்தை சுயம் கட்டுப்படுத்துவது என்பது கூடாத காரியம்.  ’தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்’ (பிலி. 2:13). அவற்றை நிறைவேற்ற உதவியும் செய்கிறார்.

இச்சைகள் பலவிதம்: பரிசுத்த வேதாகமத்தில் ’இச்சை’ என்பது பலவிதமான அடைமொழிகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் சில: பாவ இச்சைகள் (ரோமர் 7:5); துர் இச்சைகள் (ரோமர் 13:14); மோக இச்சை (I தெச. 4:4); மோசம்போக்கும் இச்சைகள் (எபே. 4:22); பாலியத்துக்குரிய இச்சைகள் (2 தீமோ. 2:22); பிசாசானவனுடைய இச்சை (2 தீமோ. 2:26); மாம்ச இச்சைகள் (பேதுரு 2:11); அசுத்த இச்சை (2 பேதுரு 2:10); மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை (1 யோவான் 2:16), உலகத்தின் இச்சை (1 யோவான் 2:17) துன்மார்க்கமான இச்சைகள் (யூதா 1:18) என்பன. இதுபோன்ற இச்சைகள் ஒருவனை அடக்கி ஆளாத வண்ணம் அவன அவைகளை மேற்கொள்ளும் நிலைமையை இச்சையடக்கம் எனலாம்.

எவற்றையெல்லாம் இச்சிக்கக்கூடாது?: பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட பத்துக் கட்டளைகளில் ‘இச்சியாதிருப்பாயாக’ என்பது இறுதியாக பத்தாவது கட்டளையாக கொடுக்கப்பட்டுள்ளது. நாம் எதையெல்லாம் இச்சிக்கக் கூடாது? ’பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக’ (யாத். 20:17). ’உன் இருதயத்திலே அவள் [துன்மார்க்க, பரஸ்திரீ] அழகை இச்சியாதே’ (நீதி. 6:25). ’அவனுடைய [அதிபதி] ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே’ (நீதி. 23:3). ’அந்தப்படியே, உதவிக்காரர்… இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல்…’ (1 தீமோத்தேயு 3:8)  ’கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்ற விதமாய், … இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும்’ (தீத்து 1:7).  இவ்விதம் பலவிதமான காரியங்களை இச்சிக்கக் கூடாது என நாம் வேதாகமத்திலிருந்து வெளிப்படையாக அறிகிறோம்.

இச்சையின் விளைவுகள்:  ஒருவனுக்கு பாவ சோதனைகளை கொண்டுவருவதே அவனுடைய உள்ளான இச்சை தான். ’அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்’ (யாக். 1:14 ). ’உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா?’ (யாக். 4:1). இச்சையின் இறுதிபலன் மரணம். ‘பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்’ (யாக். 1:15). இச்சைகளை நிறைவேற்றும் உள்ளான எண்ணத்துடன்,, வெளிப்படையாக பக்தியாக நாம் ஜெபித்தாலும் அந்த ஜெபம் வீணாய்ப் போய்விடுகிறது. ‘நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்’ (யாக். 4:3).

இச்சையடக்கத்தின் பலன்கள்: நித்தியவாழ்வில் நித்திய கிரீடத்தைப் பெற்றுக்கொள்ள இச்சையடக்கம் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ‘பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள்; நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்’ (கலா. 5:16). இச்சையடக்கத்துடன் நடந்துகொள்வது ஒரு உண்மைக் கிறிஸ்தவனுடைய அடையாளம். ’கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்’ (கலா. 5:24). அநித்தியாமான, அற்பநேர இன்பம்தரும் இச்சைகளுக்கு இணங்காமல் நித்தியமான பலனை எதிர்நோக்கிக் காத்திருக்கும் போது,   இச்சையடக்கம் நமக்கு பொறுமையைக் கொண்டுவருகிறது (2 பேதுரு 1:6). இச்சையடக்கம் என்பது ஒருவரின் ஆசைஇச்சைகளை அடக்கி வைத்திருப்பதால், அது அவனை அடிமைப்படுத்துவதாக அர்த்தமல்ல; அதுதான் அவனுக்கு உண்மையான விடுதலையைக் கொண்டுவருகிறது. அவனுடைய குற்ற உணர்வுகளிலிருந்து அவனை விடுவிக்கிறது.

இச்சையை மேற்கொள்வது எப்படி?: இச்சைகளின் ஆரம்பமே அது சம்பந்தமான எண்ணங்களும் சூழ்நிலைகளும் தான். எனவே அவற்றில் நாம் கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும். ’எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்’. (2 கொரி. 10:4,5). நம் எண்ணங்களை கிறிஸ்துவுக்கு நேராக ஒருமுகப்படுத்தும் போது இச்சைகளிலிருந்து விடுபடமுடியும். பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்கும் அனுதின வழிநடத்துதலுக்கும் நம்மை நாம் விட்டுக்கொடுக்க வேண்டும். ’ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்’ (கலா. 5:16). ’நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்’ (கலா. 5:25). 

இச்சையடக்கத்தில் அடுத்து முக்கியமாக கவனமாக இருக்க வேண்டியது பாவ சூழ்நிலைகளிலிருந்து விலகிச் செல்வதாகும். விலகியிருக்க வேண்டிய பாவங்கள் என பல பரிசுத்த வேதாகமத்தில் கூற்ப்பட்டிருந்தாலும் விலகி ஓட வேண்டிய பாவங்கள் என குறிப்பிடப்பட்டுள்ள மூன்றில் இச்சையும் ஒன்று. ’அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு’ (2 தீமோ. 2:22). எனவே இச்சையடக்கமில்லாத அஞ்ஞானிகளுடன் உள்ள சகவாசத்தைக் குறைத்து, கிறிஸ்துவினுடையவர்களிடம் அதிகம் ஐக்கியம் கொள்ளுவதினாலும் இவற்றின் மூலம் அனுதின வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் நம்மை அர்ப்பணிக்கும் போது ஆவியின் கனியாகிய இச்சையடக்கம் நம் வாழ்வில் வெளிப்படும். இந்த விதமான அனுபவங்களுக்கு நம்மை அர்ப்பணிப்போமாக. 

ஆமென். 


[இது பாலைவனச் சத்தம் – செப்டெம்பர் 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]

Monday, August 14, 2017

ஆவியின் கனி – சாந்தம்

நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ள கர்த்தரின் நாமத்தில் நான் உங்களை வாழ்த்துகிறேன். ஆவியின் கனி வரிசையில் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம் இவைகளைத் தொடர்ந்து எட்டாவது அம்சமாக காணப்படும் சாந்தம் குறித்து நாம் இந்த மாதத்தில் தியானிப்போம்.
சாந்தம் என்பதற்கு கிரேக்க மொழியில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘Prautes’ என்ற வார்த்தையானது, ஆங்கிலத்தில் gentleness (மென்மை) மற்றும் meekness (அடக்கம்) என்ற வார்த்தைகளில் குறிப்பிடப்படுகிறது. பொதுவாக gentleness என்பது ஒருவரது வெளிப்படையாக செயல்பாடுகளையும் meekness என்பது ஒருவரது உள்ளான மனநிலையையும் குறிப்பவை. எனவே உள்ளான அடக்க குணம் ஒருவரது மென்மையான செயல்களில் வெளிப்படுவதை சாந்தம் என வரையறுக்கலாம்.  சாந்தம் என்பது ஒருவருடைய இருதயத்தில் மறைந்திருக்கும் குணம் (I பேதுரு 3:4).  ஆனால் அது நமது கிரியைகளில் வெளிப்படும். ’உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக’ என பவுல் கூறுவதை பிலிப்பியர் 4:5 ல்  நாம் வாசிக்கிறோம்.
சாந்தகுணம் என்பது ஒருவர் தன் இயலாமையினால் விதியின் மீது பழியைப் போட்டு வேறுவழியின்றி அமைதியாய் இருக்கும் நிலை அல்ல; மாறாக, சாதகம் மற்றும் பாதகமான எல்லா சூழ்நிலைகளிலும் தேவன் மீது நம்பிக்கை வைத்து அவரது சித்தத்திற்கு தன்னை அர்ப்பணித்து தனது சுய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அடுத்தவர் மீது மென்மையுடன் நடந்து கொள்ளும் உள்ளான குணம். இந்த உண்மையினை புரிந்து கொள்ள சங்கீதம் 37 யை நாம் வாசித்து அறிந்து கொள்ளவேண்டும். குறிப்பாக 11ம் வசனத்தில், ’சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்’ என்று வாசிக்கிறோம்.  இதையே தான் இயேசு கிறிஸ்துவும் தனது மலைப்பிரசங்கத்தில், ’சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்’ (மத்தேயு 5:5) என கூறினார். 
பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் சாந்தகுணமுடன் நடந்து கொண்டவர்களை பெரியதாக பட்டியலிட முடியும். அந்தப் பட்டியலில் மோசே (எண்ணாகமம் 12:3), தாவீது (2 சாமுவேல் 16:11-12), யோபு (யோபு 1:21), எரேமியா (எரேமியா 11:19), இயேசு கிறிஸ்து (மத். 11:29) மற்றும் பவுல் (2 கொரி. 10:1) ஆகியோர் முக்கிய இடம் பெறுகின்றனர். இவர்கள் அனைவருமே தங்கள் சாந்தகுணத்தினால் பாதகமான சூழ்நிலைகளிலும் மனரம்மியத்துடன் நடந்துகொண்டனர்.
’நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்’ என்றார் இயேசுகிறிஸ்து (மத்தேயு 11:29). சாந்தமும் மனத்தாழ்மையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தக்கூடிய நிலையில் உள்ள ஒருவர் மற்றவரை தன் அதிகாரத்தினால் தாழ்மைப்படுத்த (humiliate) தான் முடியும். ஆனால், தான் மனத்தாழ்மை (humility) உடைய ஒருவரோ அந்த அதிகாரத்தை அடக்கத்துடன் முறையாக பயன்படுத்தி அடுத்தவரை தன் வயப்படுத்த முடியும். இது சாதாரணமாக மனிதனால் கூடாதது தான். இது ஆவியின் கனி. ஒருவரது அதிகார தோரணைக்குப் பயந்து ஒருவர் கீழ்ப்படிவதைக்காட்டிலும் அவரது சாந்தகுணத்திற்கு முன்பாகவே அநேகர் கீழ்ப்படிவர் (I பேதுரு 2:18).  மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான் (எண்ணாகமம் 12:3 ). எனவே தான் இஸ்ரவேல் ஜனங்களை மோசேயால் வெற்றிகரமாக வழிநடத்த முடிந்தது.
சாந்தகுணம் என்பது பயந்தசுபாவம் (timid) உடையதல்ல; மாறாக சாந்தம் என்பது தாழ்மையான இருதயத்துடன் சமாதானமான மனநிலையில் தேவனுடைய திட்டத்திற்கு முழுவதும் அர்ப்பணிக்கப் பட்ட நிலையைக் குறிக்கிறது. சாந்தமாய் இருப்பதற்கு எதிர்மறையான காரியம் கோபப்படுதல் ஆகும். கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவன் சண்டையை அமர்த்துகிறான் (நீதிமொழிகள் 15:18); நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான் (நீதிமொழிகள் 14:29) என்ற வசனங்களின் மூலம் இதனை உணர்ந்து கொள்ளலாம்.
சாந்தகுணம் என்பது அக்கறையின்றி நமக்கேன் வம்பு என அலட்சியமாக இருந்து விடுவது அல்ல; மாறாக  இல்லாமல் அன்பிற்கும் சாந்தகுணத்திற்கும் தொடர்புண்டு. (I கொரிந்தியர் 13:4). தேவனிடமும் சக மனிதரிடமும் உண்மையாக அன்புசெலுத்தும் போது நமது  சாந்தகுணம் வெளிப்படுகிறது. ’உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயுமிருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்’ (II கொரிந்தியர் 10:1) என்பது பவுலின் அனுபவ சாட்சி.  நாமும் அவ்விதம் நடந்துகொள்ள கலாத்தியர் 6:1 ல் ‘சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்’ என அவர் அறிவுறுத்துவதைப் பார்க்கிறோம்.
சாந்தகுணம் ஒரு பலவீனம் அல்ல (Meekness is not a weakness); மாறாக ஆவிக்குரிய ஒருவருக்கு அதுவே பலம் எனலாம். சாந்தகுணமுள்ளவர்களுக்கு கிடைக்கும் பலன்களாவன: ’சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்’ (சங்கீதம் 22:26); ’கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்’ (சங்கீதம் 147:6); ’சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்’ (சங்கீதம் 149:4); ’சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்’ (சங்கீதம் 25:9); ‘சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்’ (மத்தேயு 5:5).
நம்முடைய சுபாவமும் நடத்தையும் எப்படி உள்ளன? எல்லா சூழ்நிலைகளிலும் தேவனுடைய அநாதி தீர்மானம் மற்றும் ஆளுமைக்கு நம்மை முழுவதுமாக அர்ப்பணித்திருக்கிறோமா? அதிகாரம் செலுத்தும் நிலைகளில் இருக்கும் போது அதனை நாம் எந்த மனநிலையுடன் செயல்படுத்துகிறோம்? பாதகமான சூழ்நிலைகளிலும் பரலோக தேவன் மீது பற்றுதல் உள்ளவர்களாக காணப்படுகிறோமா?  நம்மை சுற்றிலும் அநியாயங்கள் அரங்கேறும் போது பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சல், கோபம், பொறாமை கொள்கிறோமா அல்லது சாந்தகுணத்துடன் மனசமாதானத்தைக் காத்துக்கொண்டு அடுத்தவர் மீது உண்மையான அன்புடன் சூழ்நிலையை பொறுமையுடன் கையாளுகிறோமா? என நம்மை நாமே ஆராந்து அறிந்து சாந்தம் என்னும் ஆவிக்குரிய கனியில் பெருக நம்மை அர்ப்பணிப்போம். ஆமென். 

[இது பாலைவனச் சத்தம் – ஆகஸ்ட் 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]

Friday, July 21, 2017

புறப்பட்டுப் போய் … ... ...

{கடந்த வாரம் இதே நாளில் (14.07.2017) குவைத் IEM ஜெபத்தில் நான் பகிர்ந்து கொண்ட சிந்தனை}

தேவனுடைய கிருபையினால் இந்த நாளிலும் நாம் இப்படியாக கூடி ஜெபிக்க கிடைத்த வாய்ப்பு, இதில் அவருடைய வசனத்தை உங்களுடன் பகிந்து கொள்ள தேவன் எனக்குக் கொடுத்த வாய்ப்புக்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன். இது பெரிய பிரசங்கம் அல்ல. இன்று வெள்ளிக்கிழமை; சபைகளில் சென்று தேவசெய்திகளைக் கேட்டிருப்போம். இல்லையெனில் இனி கேட்க இருக்கிறோம். நானும் ஏற்கனவே இன்று கேட்டாகி விட்டது; இனியும் கேட்கவிருக்கிறேன். எனவே இது பெரிய செய்தி அல்ல. இது ஒரு சிறிய சிந்தனை தான். 

இப்போது IEM ஊழியங்களை அறிமுகப் படுத்திவிட்டு, நாம் எந்த அளவில் அதில் பங்கெடுக்கலாம் என ஒரு பெரிய பட்டியலைக் காட்டினார்கள். சிறியதாய் ஒன்றில் ஆரம்பித்து அது வரவர பெரியதாகப் போய் கடைசியாக வெடிகுண்டு போடுற மாதிரி ஒன்றைக் கூறினார்கள்.  சிறியதாக முதலில் ஜெபிக்கிற காரியம்... அது ரொம்ப சிம்பிள். அது யார் வேண்டுமானாலும் செய்யலாம். செய்யவில்லையென்றாலும் கூட செய்ததாக சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கடைசியாகச் சொன்னது மிஷனெரியாகப் போகிறது... அது சாதாரண காரியம் அல்ல. ஆனால், விசுவாசிகளாகிய நாம் அனைவருமே மிஷனெரிகளாக அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இயேசுகிறிஸ்துவின் இறுதிக்கட்டளையாக (Great Commisison) மத்தேயு 28:19 ல் ’ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்’ என வாசிக்கிறோம். ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய் … … போகவேண்டும் என்பது சீடர்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. இயேசுவின் சீடர்கள் என சொல்லிக் கொள்ளும் நமக்கும் இது கட்டளையாக கொடுக்கப்பட்டுள்ளது. “The great commission is not an option to be considered; it is a command to be obeyed”  என்றார் Hudson Taylor என்ற மிஷனெரி.

ஆகையால், புறப்பட்டுப் போய்… நாமும் இந்தியாவிலிருந்து புறப்பட்டு இங்கே குவைத் வந்திருக்கிறாம். ஆனால், நாம் வந்த நோக்கம் வேறு என்பது நமக்கே தெரியும். அங்கே இருக்கிற பொருளாதார மற்றும் சில சூழ்நிலைகள் நமது ஒரு சில எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வில்லை. எனவே அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே நாம் இங்கே வந்திருக்கிறோம். நம்மில் யாருமே இந்த வசனத்தின் அடிப்படையில் தான் குவைத்திற்கு வந்திருக்கிறேன் என்று சொல்ல மாட்டோம் என நினைக்கிறேன். 

போ என்பது அந்தக் காலத்தில் கடினமான ஒன்று, ஆனால், இந்த காலத்தில் போவது எளிதான காரியமாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால், இந்த காலத்தில் போகவேண்டியது கூட இல்லை. இண்டர்நெட், சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தியை பகிர்ந்து கொண்டால் உலகில் பல பாகங்களிலிருந்தும் பலர் நம்மைத் தொடர வாய்ப்பு உள்ளது. அந்த அளவுக்கு தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. போகவேண்டியது கூட இல்லை. இந்த நாட்களில் போக வேண்டிய சூழ்நிலையும் கூட தானாகவே வந்துவிட்டது. தொழிலுக்காகவோ ஊழியத்திற்காகவோ விரும்பியோ விரும்பாமலோ நாம் போக வேண்டிய சூழ்நிலைகளும் உருவாகி விட்டன. இன்றைய உலக வளர்ச்சியினை நகரமயமாக்கல், உலகமயமாக்கல், தொழில்மயமாதல்  இப்படி எந்த வார்த்தைகளில் நாம் வர்ணித்தாலும் அதில் நாம் உள்ளடங்கியிருப்பதால், இந்தியாவில் ஒரு கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்த நாம் இப்படியாக நாடுகடந்து நாடு வந்து சேர்ந்திருக்கிறோம். எனவே இப்போது போவது ஒரு பெரிய காரியமே அல்ல. 

நாமெல்லாரும் குவைத் வந்தாயிற்று. ஆனாலும் வந்த இந்த இடத்தில் அடுத்து செய்ய வேண்டிய காரியத்தை நாம் செய்கிறோமா என்பது தான் முக்கியமான காரியம். அது என்ன காரியம்? சகல ஜாதிகளையும் சீஷராக்கி … …  எனவே, ’மிஷனெரிகளாய் வட இந்தியாவில் ஊழியம் செய்பவர்கள் மட்டும் தான் மிஷனெரிகள்; அது அவர்கள் மேல் விழுந்த கடமை, எனவே அவர்களைத் தாங்குவது நம்முடைய கடமை; அத்துடன் நமது கடமை முடிந்து விட்டது’ என நாம் நினைக்கக் கூடாது. நாமும் இங்கு ஒரு மிஷனெரி போன்று தான் இருக்கிறோம். இருக்கிற இடத்திலே நாம் நம்முடைய வேலைகளில் உத்தமமாக கிறிஸ்தவ சாட்கியைக் காத்துக் கொள்கிறோமா? சாட்சியுடன் நடந்து கொள்வதுடன் மட்டுமல்லாமல் சாட்சி பகருகிறோமா என்பதும் முக்கியம். இருக்கிற இந்த இடத்திலும் ஆண்டவருக்காய் யாரையாகிலும் அதாயப்படுத்த முடியுமா என்ற சிந்தனை உள்ளவர்களாக நாம் இருக்க வேண்டும். 

பரிசுத்த வேதாகமத்தில் தேவனுடைய கட்டளையை ஏற்று புறப்பட்டுப் போன ஒருவரைக் குறித்த ஒரு சிந்தனையை உங்களிடம் பகிந்து கொண்டு செய்தியை முடிக்க விரும்புகிறேன். ஆபிரகாமைக் குறித்துச் சொன்னால், அதிகம் சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனாலும் ஆதியாகமம் 12 ம் அதிகாரம் முதல் நான்கு வசனங்களை மாத்திரம் பார்க்கலாம். அந்த வசனங்களை நான் உங்களுக்காக வாசிக்கிறேன். 

1. கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. 2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். 3. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். 4. கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.

ஆபிரகாமுக்கு அதுவரையும் குழந்தையில்லை என்பது நமக்குத் தெரியும். இப்போது வயது எழுபத்தைந்து; நூற்றி எழுபத்தைந்து வயது வரை அவன் உயிரோடு இருந்ததாக ஆதியாகமம் 25ல் நாம் பார்க்கிறோம். நூற்று எழுபத்தைந்து வருட தன் உலக வாழ்க்கையில், அவன் தனது எழுபத்தைந்தாவது வயதில் தேவனுடய அழைப்பைப் பெறிகிறான். சங்கீதம் 90:10ன் படி,  நமது ஆயுசு நாட்கள் எழுபது; பெலத்தின் மிகுதியினால் எண்பது; அதுவும் இடுப்புவலி மூட்டுவலி அது இது என கொஞ்சம் கஷ்டம் தான். நம்மில் பலரும் நமது ஆயுளில் பாதியில் அல்லது பாதியைக் கடந்து கொண்டு இருக்கிறோம். ஆபிரகாம் அழைப்பைப் பெற்றபோது தனது ஆயுள் நாளில் பாதியை இன்னும் கடக்கவில்லை. நமக்கும் இது மிகவும் தாமதமாகி விட்ட ஒன்று அல்ல. 

ஆபிரகாம் ஆண்டவரிம் இருந்து எப்படிப்பட்ட அழைப்பை பெற்றார் என்று நான் சிந்தித்த போது, அது எனக்கு மிகவும் பிரயோஜனமாகக் காணப்பட்டது. நாம் எப்போதுமே வீடுகளில் இந்த இரண்டாம் வசனத்தைத தான் சுவர்களில் மாட்டி வைத்திருப்போம், இல்லையெனில், மூன்றாம் வசனத்தைக் கூட நமக்குள் சொல்லிக் கொள்வோம். முதல் வசனம் தான் நிபந்தனை. முதல் வசனமாகிய நிபந்தனையை ஆபிரகாம் நிறைவேற்றும் போது, ஆண்டவர் அவ்வித காரியங்களை செய்வதாக வாக்குப் பண்னினார். ஆபிரகாம் அப்படியே நிறைவேற்றினார், ஆண்டவரும் அப்படியே வாய்க்கச் செய்தார் என்பதை பின்பு நாம் சரித்திரத்தில் காண்கிறோம். 

இந்த பின்னணியில், ஆபிரகாமை மூன்று விதமான காரியங்களில் இருந்து போகும்படியாக தேவன் அவனை அழைப்பதை இங்கே பார்க்கிரோம். முதல் வசனத்தில் பாருங்கள். ஒன்று, தேசத்தை விட்டுப் போக வேண்டும்; இரண்டு, இனத்தை விட்டுப் போக வேண்டும், மூன்று, தகப்பனுடைய வீட்டை விட்டுப் போக வேண்டும். அப்பொழுது இரண்டு மற்றும் மூன்றாம் வசனங்களில் சொல்லப்பட்ட ஆசீர்வாதங்கள் வந்து சேரும் என்கிறார். நான்காம் வசனத்தில் பார்க்கிறோம்… கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான். 

நாமெல்லாரும் இங்கு வந்து விட்டோம். ஆனால், இங்கு சொல்லப்படிருக்கும் கோணத்தில் தான் வந்திருக்கிறோமா என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். நம் நாட்டை விட்டு நாம்  வந்திருக்கிறோம். அங்கே நிலைமை சரியில்லை. அங்கு இருக்கும் அரசியல் நிலைமைகளுக்கு இடையில் இங்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறோம். நாம் நமது இனத்தை விட்டு வந்திருக்கிறோமா? சிந்திக்க வேண்டும். இன்னும் நமது மொழியை மறக்கவில்லை. இன்னும் நமது கலாச்சாரத்தை நாம் மறக்கவில்லை. இன்னும் கொஞ்சம் உள்ளே சென்று நோக்கினால், வடக்கு தெற்கு, அது இது என பல்வேறு எண்ண ஓட்டங்கள் இங்கும் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கும். இங்கே இருந்து கொண்டும் நாம் இன்னும் அவைகளை விட்டுவிடவில்லை. இன்னும் குறிப்பாக, நாம் நமது தகப்பன் வீட்டை விட்டுவந்திருக்கிறோமா? நான் இங்கு வந்ததே அதற்காகத் தானே? பின்னர் எப்படி விட முடியும்? அப்படித் தானே? நமது சொந்தபந்தங்கள் அப்பா அம்மா நமது குடும்ப உறுப்பினர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தானே நாம் இங்கு வந்திருக்கிறோம். 

எனவே நாம் இங்கு வந்து சேர்ந்திருப்பது ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பு போன்றும் அவனது கீழ்ப்படிதல் போன்றும் அல்ல. ஆனால், இங்கு நாம் சிந்திக்க வேண்டியது, ஆபிரகாமை எழுபத்தைந்து வயதில் ஆண்டவர் அழைத்த அழைப்பு ஒரு சாதாரண அழைப்பு அல்ல; அவனது கீழ்ப்படிதலும் ஒரு சாதாரண கீழ்ப்படிதல் அல்ல. நாமெல்லாரும் இங்கு வந்து சேர்ந்தது கூட, ஏதோ ஒருநாளில் திடீரெனெ எடுப்பப்பட்ட தீர்மானம் அல்ல, சில மாதங்களோ வருடங்களோ அதைக்குறித்து யோசித்து தீர ஆராய்ந்து வந்து சேர்ந்திருக்கிறோம். இப்போது நாம் இங்கு இருந்தாலும் வயதான நாட்களிலாவது நாமும் நமது சந்ததியும் பொருளாதார நிலையில் வலுவாக நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நாம் இங்கே இப்போது இருக்கிறோம். ஆபிரகாமோ எல்லவற்றையும் விட்டுவிட்டுப் போகும்படி அழைக்கப்பட்டான். 

எல்லாவற்றையும் விட்டுவிட்டு செல்வதென்றால், பின்னர் வாழ்க்கை என்பது தான் என்ன? என்ற சிந்தனை ஆபிரகாமுக்கு வந்திருக்கக் கூடும். அந்த சூழ்நிலையிலும் அவர் வாழ்க்கையைக் குறித்து ஒரு சரியான நிலைப்பாட்டினை எடுத்ததன் விளைவு தான் அவனது கீழ்ப்படிதல். நாம் எதற்காக இந்த உலகத்தில் வாழ்கிறோம். சிறுவயதில் கஷ்டப்பட்டு படித்தோம்; இப்போதும் கடினமாக உழைக்கிறோம்; நம் சந்ததிக்காக சேர்க்கிறோம்; ஒரு கட்டத்தில் உலகத்தை விட்டுக் கடந்தும் செல்வோம். இந்த கால ஓட்டத்தில் கடந்து செல்வது மட்டும் தான் வாழ்க்கையா? தேவன் நம் ஒவ்வொருவரையும் குறித்து நோக்கங்களும் திட்டங்களும் வைத்திருக்கிறார். அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டும். 

ஆபிரகாம் இவ்விதமாகத் தான் வாழ்க்கையைக் குறித்து சிந்தித்திருக்க வேண்டும். வாழ்க்கை என்பது வெறுமனே கடந்து செல்வது மட்டுமல்ல; திட்டங்களை நிறைவேற்றுவது தான் என அவர் உணர்ந்திருக்க வேண்டும். நிறைவேற்றுதல் என்னும் போது எதனை? எனது விருப்பங்களையா? பெற்றோர் அல்லது சமுதாய எதிர்பார்ப்புகளையா? இல்லை…  நம்மைக்குறித்த தேவனுடைய சித்தத்தை நம் வாழ்க்கையில் நிறைவேற்றி முடிப்பது தான் வாழ்க்கை. வாழ்க்கையைக் குறித்த இந்த கண்ணோட்டம் இருந்த காரணத்தினால், ஆபிரகாமால் முழுமையாக விட்டுப் போக முடிந்திருக்கிறது. அவரது சந்ததியும் நன்றாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது.

நாம் ஒருவேளை இவ்விதமாக அழைக்கப்படாவிட்டாலும் இது குறித்த சிந்தனை, வாழ்க்கையைக் குறித்த நமது சிந்தனையை மாற்றியமைக்கிறது. இன்று நமது சிந்தனை எப்படி இருக்கிறது? நாமெல்லாரும் மிஷனெரி ஊழியங்களில் ஏதோவொரு விதங்களில் ஈடுபடுகிறோம், அது நல்லது. ஜெபிக்கிறோம்… கொடுக்கிறோம்… அனுப்புகிறோம்.. ஆனால், போகவும் ஆயத்தமாக இருக்கிறோமா? ’அன்பே இல்லாமல் நம்மால் கொடுக்க முடியும்; ஆனால் கொடுக்காமல் அன்பு செலுத்த முடியாது’ என யாரோ ஒருவர் கூறியதாக ஒரு மேற்கோள் சொல்லப்படுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், மிஷனெரி ஊழியங்களில் பல நேரங்களில் ஜெபிக்காமல் நம்மால் கொடுக்க முடியும்; ஆனால் கொடுக்காமல் அல்லது ஈடுபடாமல், நம்மால் ஜெபிப்பதை மட்டுமே செய்துகொண்டிருக்க முடியாது. ஜெபம் முக்கியமான அடிப்படையான ஒன்று. ஜெபம் நம்மை ஈடுபாட்டுக்குள் வழிநடத்தும். அப்போஸ்தலர் 1:8 ல் ’பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்’ என்று பார்க்கிறோம். அதாவது முதலில் இருக்கும் இடத்தில், இருக்கும் நாட்டில், பக்கத்து இடங்களில், உலகத்தில் அனைத்து நாடுகளிலும் நாம் சாட்சிகளாக இருக்க அழைக்கப் பட்டிருக்கிறோம்.

எனவே ஊழியங்களுக்காக நாம் ஜெபிப்பது நல்லது. ஜெபிக்கும் போது நம்மால் கண்டிப்பாக கொடுக்கவும் முடியும். ஆனால், ஆபிரகாமுக்கு வந்த அழைப்பு நமக்கும் வருமென்றால் சுவிசேஷம் நிமித்தமாய் புறப்பட்டுச் செல்லவும் நாம் ஆயத்தமாக இருக்கிறோமா என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். நம் சொந்த நாட்டைவிட்டு வந்து விட்ட நாம் வந்த இடத்தில் சாட்சிகளாக வாழுகிறோமா? சாட்சி பகருகிறோமா? சிந்தித்துப் பார்ப்போம். அர்ப்பணிப்போம். தனிப்பட்ட முறையில் தேவன் நம்மோடு இடைபட்டு வழிநடத்துவார். 

ஆமென்.  

- பேதுரு தேவதாசன்

Wednesday, July 12, 2017

ஆவியின் கனி - விசுவாசம்

விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசக் குடும்பத்தார் அனைவரையும் வாழ்த்துகிறேன். ஆவியின் கனி வரிசையில் நற்குணத்தைத் தொடர்ந்து நம்மிடம் காணப்பட வேண்டிய இன்னுமொரு அம்சம் விசுவாசம் என்பதாகும்.
’விசுவாசம்’ என்ற வார்த்தையை ’Faith’ என நாம் எளிதில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விடுவோம். ஆனால் NIV மற்றும் NKJV போன்ற முக்கிய ஆங்கில வேதாகமங்களிலோ இந்த வார்த்தைக்கு ’Faithfulness’ என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது. இந்த faithfulness என்ற வார்த்தை அப்படியே உண்மை, சத்தியம் என்ற வார்த்தைகளுக்கும் பயன்படுத்தப் பட்டுள்ளது. எனவே ஆவியின் கனியாகிய விசுவாசம் என்ற வார்த்தையானது விசுவாசித்தல் என்ற காரியத்தை மட்டுமல்ல, விசுவாசமாக / நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளுதல் என்ற காரியத்தை இந்த ஆவியின் கனி வரிசையில் குறிப்பதாக அறியலாம். கிரேக்க மொழியில் இந்த இரண்டுகாரியங்களுக்கும் ‘Pistis’ என்ற ஒரே வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது.
விசுவாசம் என்பது தேவனுடைய பிள்ளைகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதி. இதனால் தான் அவர்களுக்கு விசுவாசிகள் என்ற பெயரே சூட்டப்பட்டிருக்கிறது. ’மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்’ (மாற்கு 1:15) என்பது தான் இயேசு கிறிஸ்துவின் முதல் பிரசங்கம். கிறிஸ்தவ வாழ்வின் முதல் அடிப்படை தகுதியும் அதுவே (யோவான் 1:12). ’விசுவாசிக்கிறவன் பதறான் (ஏசாயா 28:16); தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் (ஆபகூக் 2:4); நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது (மத்தேயு 8:13); மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் (மத்தேயு 21:22)’ போன்ற வசனங்கள் நாம் இன்னும் திரியேக தேவனை, அவருடையை வார்த்தைகளை இன்னும் விசுவாசிக்க நம்மைத் தூண்டுகின்றன.
அத்துடன் நாம் எவற்றையெல்லாம் விசுவாசிக்க வேண்டும் என்றும் அவருடைய கற்பனைகள் நமக்குப் போதிக்கின்றன. தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும் (எபி. 11:6). நாம் என்னென்ன காரியங்களுக்காக தேவனை விசுவாசிக்கிறோமோ அந்த அளவில் தான் நாம் அவருக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் நடந்து கொள்ள முடியும். எந்தவித கிரியைகளில் எல்லாம் அது செயல்படலாம் என எபிரேயர் 11ம் அதிகாரத்தில் கொடுக்கப்படுள்ள விசுவாச வீரர்கள் பட்டியலிலிருந்து தெளிவாக அறிகிறோம்.
விசுவாசத்தினாலே ஆபேல் மேன்மையானபலியை தேவனுக்குச் செலுத்தினான்; ஏனோக்கு தேவனுக்குப் பிரியமானவனாய் நடந்தான்; நோவா பேழையை உண்டுபண்ணினான்; ஆபிரகாம் கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்; மேலும் ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்; விசுவாசத்தினாலே சாராள் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணினாள்; விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன்கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்; விசுவாசத்தினாலே யோசேப்பு, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான்; விசுவாசத்தினாலே மோசே கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணி  செயல்பட்டு இஸ்ரவேலரை வழிநடத்தினான். இவ்விதமே ராகாப்,  கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் மற்றும் ஸ்திரீகள் தங்கள் விசுவாசத்தினால் நடந்து கொண்ட காரியங்களை எபியேரர் 11ம் அதிகாரம் முழுவதும் காண்கிறோம்.
எனவே விசுவாசி ஒவ்வொருவரும் விசுவாசத்துக்கு பாத்திரமாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில், ’கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது’ (யாக்கோபு 2:26). ’கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது’ (பிலி. 1:29). குறிப்பாக, கிறிஸ்தவ விசுவாசத்தினால் வரும் பாடுகள் ஒருபுறம் இருக்க, 2 தீமோத்தேயு 3:1-5 ல் கடைசி நாட்களில் வருமென்று கூறப்பட்டுள்ள உலகப்பிரகாரமான காரியங்களை நம்மிடமிருந்து விலக்கி வைக்க வேண்டும். 
அதற்கு ஆவியின் கனியாகிய விசுவாசத்தில் நாம் பெருக வேண்டியது நமக்கு அவசியமாகிறது. இதற்கு  உதாரணமாக, விசுவாசத்தின் வெளிப்பாடாக பணஆசை அற்றவர்களாக இருக்கும் நிலையை எபிரேயர் நிருபத்தில் பவுல் கூறுவதைக் காண்கிறோம். ’நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே’ (எபிரேயர் 13:5,6).
இவ்விதம் விசுவாசமும் விசுவாசமாய் இருத்தலும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவைகளே. ஒன்றில் வளர மற்றொன்று அவசியமாகிறது. அதாவது விசுவாசத்தில் வளரும் ஒருவரால் தான் விசுவாசமாகவும் நடந்து கொள்ள முடியும். விசுவாசிகளாகிய நாம் தேவனுக்கும் அவருடைய வாத்தைகளுக்கும் உண்மையாய் நடந்து கொள்ளுதல் வேண்டும். ’தேவனிடத்தில் விசுவாசமாய் இருங்கள்; என்னிடத்திலும் விசுவாசமாய் இருங்கள்’ (யோவான் 14:1) என்றார் இயேசு கிறிஸ்து. ’விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்’ (எபிரெயர் 11:6).  

இந்த விசுவாசத்தில் வளர நாம் செய்ய வேண்டியதென்ன? ’விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்’ என ரோமர் 10:17 ல் பார்க்கிறோம். நாம் கிறிஸ்தவ விசுவாசத்தில் மென்மேலும் வளர தேவனுடைய வசனமாகிய பரிசுத்த வேதாகமத்தை முறையாக வாசிக்க வேண்டும்; அவைகளை தியானிக்க வேண்டும்; அவைகளை கேள்விப்படும் போதே நமக்குள் விசுவாசம் பிறக்கும். சிறுசிறு காரியங்களில் அவைகளை செயல்படுத்தப் பழகும் போது பெரிய காரியங்களிலும் அவருக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் விசுவாச வீரர்களாக வீராங்கனைகளாக நாம் மாறுவோம். இந்த அனுபவங்களுக்கு நம்மை அர்ப்பணிப்போம். ஆமென்.

[இது பாலைவனச் சத்தம் – ஜூலை 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]


Wednesday, June 21, 2017

Yoga – Through the Eyes of a Christian Doctor


This is an Awareness article for Christians on Yoga 

In the olden days, highly contagious infectious diseases like cholera, dysentery, pneumonia were prevalent among the populations. But, nowadays we hear a lot about diseases related to the human life style such as diabetes, high blood pressure, cancer, heart-attack and depression.

Unprecedented growth in the medical science and innovations in the information technology increase the gap between the doctor and the patients… increase the medical expenses… At times even with the abundance of money to spend for medical treatment, when the doctors give no hope for life, the number of people who look for alternative medicines is being increased day by day with the expectation to get solution in whatever the way.  

One third of the outpatients in hospitals do have the physical problems caused by mental problems only. In this context, it is not a surprise that they are encouraged to seek at the alternative medicines.  There are more than 20 alternative medical methods such as Yoga, Transcendental meditation and so on. The limitations in the Allopathic medicine could be a reason for the growth of Yoga like alternative medicines.

What is Yoga?
The word “Yoga” comes from the Sanskrit language which means "to join". Human effort to connect the human with God through asanas and breath exercises is called as yoga. Yoga is considered as basically a scientific art to maintain the physical and mental health, personal behaviour, life style and self improvement tool, thus it has different explanation from different people. A popular opinion about yoga is that it is a good weapon to fight against the social challenges such as mental restlessness, mental depression, busyness, work pressure, food contamination, environment, and media impacts. 

Many of us think that yoga is just an ordinary physical exercise to relax the muscles and to increase the strength. But it is centered on the philosophical thoughts beyond exercises. According to the Pathanjali yoga sutra, which was formulated in 150 B.C, there are eight components such as Yamas,  Niyama, Āsana, Prāṇāyāma, Pratyāhāra, Dhāraṇā, Dhyāna, Samādhi. However, in later days in the 15th century Hatha Yoga emerged, which contains only two components such as Asanas (body positioning) and Pranayama (breathing exercise). This Hatha Yoga tactfully avoids the philosophical and logical questions raised by other religions and becoming very popular across the world.

Philosophical Background of Yoga
Obviously, Yoga is against Christian philosophies. We just read that the yoga is an effort to connect human being with the divine. About God, there are great differences between yoga and Christianity. According to Hinduism which has three hundred and thirty millions of gods, all that we see are divine. It says god is not a personality but one who is omnipresence as a spiritual matter. But Christianity clearly says that God is the one who has personality, created the universe and everything in it with his word and the mankind.

Even about human being, there is a big difference between them. According to yoga, since all we see are divine and human can attain the divine status through asanas and pranayamas. This is something similar to what the Satan said to Eve deceiving her, “you will be like God, knowing good and evil” (Geneses. 3:5). But according to the Bible, human being is the creation, created in the image of God, and the creator and creation can never become one.

Yoga says that the reason for all kinds of human problems is because man has not yet discovered his divine status over his basic problem and the solution for it. But according to the Bible, human sinful nature is the reason for all of his problems; only the blood of Jesus Christ could remove all his sins and cleanse him. This is God’s gracious gift to human, which cannot be attained or earned by any means. Yoga teaches to focus on one’s self rather than to focus on the one true God. Yoga encourages man to seek his own conscience than to access Bible to find solutions for the difficult life questions.

What is wrong in it?
Whatever you say against yoga, in some ways yoga gives benefits to human; then what is wrong in it? Some of us say what is wrong in it if we just observe the yoga asanas and exercises by simply neglecting the philosophical aspect. This cannot be right as we just read ahead.

All types of yoga are spiritual exercises. Every yogasana is a worship form of a Hindu deity. We cannot separate asanas and exercises from its spiritual element. On this, ‘Hinduism Today' (April – June 2003) magazine has published its displeasure that, “Separating hatha yoga from Hinduism is a deception. Many yoga teachers do not know that its roots are in Hindu religion and its spiritual purpose.”

When diseases are healed by the grace of one true God, we have to accept that even with evil power diseases can be healed. “No wonder, for Satan himself masquerades as an angel of light” (2 Cor. 11:14).  So simply by healing diseases one cannot become God. But as our God is the true God, He gives not only a physical healing but a perfect and complete healing to our spirit, soul and body. So “do not believe every spirit, but test the spirits to see whether they are from God” (1 John 4:1).

How does it work in physical healing is very important. Does this happen by the magical power which is not supported by the Bible? If so, it will bring slavery, not deliverance in the end. We should have a mental maturity to ascertain everything before accepting them. Only then we can hold on what is good. When we are not able to define clearly about what is wrong and what is right in the alternative medicines like yoga, we should practice the golden rule, “reject every kind of evil” Everything that does not come from faith is sin (Romans 14:23). So it is good to keep us away from any suspicious acts.

Christian Yoga?
In the recent days, a new practice called ‘Christian Yoga’ is sprout out combined of the physical, breathing exercises and biblical meditation. The phrase “Christian yoga” itself is an oxymoron. Can we say of somebody that he is a Christian Hindu or a Hindu Christian? “Can both fresh water and salt water flow from the same spring?” (James 3:11). “A good tree cannot bear bad fruit, and a bad tree cannot bear good fruit” (Mathew. 7:18). So it is important to examine the roots of the stem of yoga.  

“Proclaim the gospel…Heal the sick…” were the order of the commandments given to the twelve disciples (Mathew. 10:7,8). Spiritual health is more important than the concerns over physical health. “For physical training is of some value, but godliness has value for all things, holding promise for both the present life and the life to come” (1 Timothy 4:8).

Let the Bible be our Meditation; Prayer be our Exercise
According to Bible, meditation signifies the practice of contemplating how the revealed truths in the Bible are relevant to us and applying them to our life. The meditations of David were repeatedly mentioned throughout the Psalm.119. Since all Scripture is God-breathed (2 Timothy 3:16), they are surely worthy of our meditation. 

God speaks to us through the scriptures; through prayer we have a personal relationship with Him. We know that even in the most difficult times, Daniel got down on his knees and prayed three times a day, giving thanks to his God. Prayer is the best exercise to state our problems to God and to get solutions.  

As Paul determined, ‘if what I eat causes my brother or sister to fall into sin, I will never eat meat again, so that I will not cause them to fall (1 Corinthians 8:13)’, let us also be clear and live as an example to other believers and lead them to truth, without causing them to stumble. 


Therefore, I urge you, brothers and sisters, in view of God’s mercy, to offer your bodies as a living sacrifice, holy and pleasing to God - this is your true and proper worship (Romans 12:1).

.
[This is the translated version of Tamil article published in "Unnatha Siragukal" (Oct - Dec 2007) and republished in "Jamakkaran" (2008). This can be circulated to all the Christian brethren.]

 

Wednesday, June 14, 2017

உதிரம் கொடுப்போம்; அதை இன்றே கொடுப்போம்


’நல்ல சமாரியன்’ என்ற வார்த்தை வேதாகமத்தில் எங்கும் காணப்படவில்லை; ஆனால் அவனைக் கேள்விப்படாத இந்த சொற்றொடரை பயன்படுத்தாத கிறிஸ்தவர்கள் எவருமில்லை எனலாம். கள்ளர் கையில் அகப்பட்டு குற்றுயிராக்கப்பட்ட வழிப்போக்கனைக் கண்டு மற்றவர்கள் போல தானும் பக்கமாய் விலகிச் செல்லாமல், தன் நேரம், திறமை, பணத்தினை பக்குவமாய் தானம் செய்த இந்த சமாரியன் சரித்திரத்தில் நீங்கா இடம்பெற்று விட்டான் (லூக்கா 10:29-37). விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியுடன் போட்டிப் பொறாமைகளும் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், தானங்கள் செய்வோருக்கென்று எப்போதுமே ஒரு  தனி மரியாதை உண்டு.

தானங்கள் பலவிதங்களில் இருந்தாலும் அவற்றில் தலைசிறந்த தானம் இரத்ததானமே எனலாம். ஏனெனில் அதுமட்டுமே எல்லோராரும் எப்போது வேண்டுமானாலும் மற்றவர்களுக்கு வழங்கப்படக்கூடிய எளிதான ஒன்று. ஆனால் அது குறித்த ஒருவரின் சரியான புரிதலும் ஆர்வமும் மட்டுமே அதற்கு தூண்டுகோலாக அமைகிறது.

இரத்ததானம் - ஒரு அவசியத்தேவை ஏன்?

”சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்” என பரிசுத்த வேதாகமம் கூறுகிறது (லேவி.17:14). இரத்தம் மனித உடலில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அதற்கு மாற்று எதுவும் எதுவும் இல்லை. எனவே அவசர மற்றும் அவசியத் தேவைகளில், ஒருவரிடமிருந்து மற்றொருவர் பெறும் இரத்தமாற்று (Blood Transfusion) மூலம் மட்டுமே இது சரிசெய்து கொள்ளப்பட முடியும். ஒவ்வொரு இரண்டு விநாடிகளிலும் உலகில் யாரோ ஒருவருக்கு இரத்தமாற்று தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இரத்தமாற்று என்பது ஏதோ விபத்து மற்றும் அவசர நேரங்களில் மட்டும் செய்யப்படும் மருத்துவ சிகிச்சை முறை அல்ல; புற்றுநோய் மற்றும் இரத்த சம்பந்தமான வியாதியிலுள்ளோருக்கு அது வழக்கமாகவே தேவைப்படுகிற ஒன்று. செஞ்சிலுவை சங்கங்களில் உலகளாவிய அமைப்பின் கணக்கெடுப்பின்படி, உலகில் மூன்றில் ஒரு இரத்தமாற்று புற்றுநோய் மற்றும் இரத்த சம்பந்தமான வியாதியிலுள்ளவர்களுக்கும் வெறும் இரண்டு சதவிகித இரத்தம் மட்டுமே சாலைப்போக்குவரத்து மற்றும் இதர விபத்துகளில் சிக்கியவர்களுக்கு செய்யப்படுகிறது. நம் நாட்டில் ஒரு ஆண்டிற்கு சுமார் 4 கோடி யூனிட் (ஒரு யூனிட் என்பது சராசரியாக 350 மிலி) இரத்தம் தேவைப்படுகிறது; ஆனால் கிடைப்பது வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே.

மேலும் தானமாக பெறப்பட்ட இரத்தத்தை மூன்று மாதங்களுக்குள் உபயோகித்தாக வேண்டும். அதனை  எவ்வளவு குறைந்த இடைவெளிக்குள் தேவையிலுள்ள ஒருவருக்கு பயன்படுத்திக் கொள்கிறோமே அவ்வளவு அது பிரயோஜனமானதாக் இருக்கும். எனவே அவைகளை முன்கூட்டியே தாராளமாக சேமித்து வைக்க இயலாது. அவ்வப்போது எழும்  இரத்ததேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து கொள்ள, இரத்தத்தை தானமாக வழங்க முன்வரும் தன்னார்வலர்களைத் தன் தொடர்பில் வைத்திருக்கும் இரத்ததான அமைப்புகளின் சேவையும் ஒரு அவசியத் தேவையாகி விட்டது.

தன்னார்வ இரத்ததானமே தலைசிறந்த ஒன்று

ஒருவருக்கு ஏற்படும் அவசர மற்றும் அவசிய இரத்தத் தேவையை அவர் மூன்று வழிகளில் நிறைவு செய்துகொள்ளலாம். 1) பணம் கொடுத்து இரத்த வங்கிகளில் ஏற்கனவே இருக்கும் இரத்ததினை பெறுவது; 2) உறவினர் / குடும்பத்தினரிடமிருந்து அந்த நேரத்தில் பெறுவது; 3) தன்னார்வலர்கள் மூலம் இரத்ததை தானமாக பெறுவது. முதலில், பணம் கொடுத்து இரத்தவங்கிகளில் வாங்கிக் கொள்வது எல்லாருக்கும் சுலபமாக வாய்ப்பதில்லை. அங்கேயும் இது எளிதில் கிடைக்கும் விஷயம் அல்ல. தானாக தானம் செய்ய முன்வந்த அல்லது குறைந்த பணத்திற்கு தன் இரத்தத்தை விற்க வந்த ஒருவரால் தான் இது கிடைக்கிறது. இங்கு பணம் என்ற காரியம் உள்ளே வருவதால் இந்த இரத்தத்தின் சுத்தம் மற்றும் பாதுகாப்புக்கு இங்கு உத்தரவாதமில்லை.

இரண்டாவதாக, நெருங்கிய உறவினர் அல்லது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பெறுதல் ஒரு பாதுகாப்பான வழிமுறை தான்.  ஆனால், இங்கு ஒரு அவசரத் தேவை என்று வந்தவுடன் மட்டுமே இந்த உறவுகளை நாடிச் செல்வதால், எல்லோருக்கும் இது சாத்தியப்படுவதில்லை. அவசரத் தேவைகளில் மட்டுமல்லாமல் வழக்கமாகவே இரத்தம் பெறவேண்டிய சில உடல் உபாதைகளில் இருப்போர் எப்போதும் தங்கள் குடும்ப உறுப்பினரையே நம்பியிருக்கும் இந்த வழிமுறை போதாது.

மூன்றாவதாக, தாமாக முன்வந்து இரத்ததானம் செய்யும் முறை ஒரு சிறந்த முறையாக மட்டுமல்ல, செலவு குறைந்த பாதுகாப்பான மற்றும் நிலையான வழிமுறையாக இருக்க முடியும். ஏனெனில் இங்கு தாமாக முன்வருவோர் அப்படி ஒருதேவை வரும் எந்தநேரத்திலும் தன் இரத்தத்தை தானமாக தர எப்போதும் ஆயத்தமாக இருக்கிறார். இங்கு அவருக்கென்று ஊக்கத்தொகை எதுவும் கொடுக்கப்பட வேண்டுவதில்லை என்பதால், தேவையிலுள்ளோர் அந்த இரத்தத்தை பயன்படுத்தும் நிலைக்கு பக்குவப்படுத்த ஆகும் செலவு குறைவாக இருக்கிறது.

இந்த மூன்று முறைகளிலும் மூன்றாம் முறையே உலகில் பரந்த அளவில் நடைமுறையில் சாத்தியமான, காலாகாலமாக நிலைத்து நிற்கும் வழிமுறையாக கண்டறியப்பட்டுள்ளதால், தாமாக முன்வந்து இரத்ததானம் செய்யும் பழக்கத்தை ஊக்குவிக்க உலக சுகாதார நிறுவனம் கி.பி. 2004 முதல் வருடந்தோறும் ஜூன் 14 ல் உலக இரத்ததானம் செய்வோர் தினத்தை அனுசரித்து வருகிறது. இந்த 2017 வருடத்திற்கான அதன் மையக்கருத்து: ”உதிரம் கொடுப்போம்; அதை இன்றே கொடுப்போம்; அவ்வப்போதும் கொடுப்போம்” என்பதாகும். 

இரத்ததானம் செய்வோருக்கு வரும் நன்மைகள்

ஒருவர் இரத்ததானம் செய்வதால் அவருக்கு ஏற்படும் நன்மைகள் ஏராளம். முதலில் ஒரு மருத்துவக் குழுவினை சந்தித்து தம் உடலின் பொதுவான தகுதிகளை உறுதி செய்ய அது உதவுகிறது. ஒவ்வொரு முறையும் இரத்ததானம் செய்யும் போதும், எந்த பணமும் செலவும் செய்யாமல் ஒருவர் தமது உடல் ஆரோக்கியமாகவும், மஞ்சள் காமாலை, மலேரியா, எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள்  போன்றவை எதுவும் தமக்கு இல்லை என்பதை உறுதி செய்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. இறைக்கிற கிணறு தான் சுரக்கும் என்பர்; குறிப்பிட்ட இடைவெளியில் வழக்கமாக இரத்ததானம் செய்வதால் நமது உடலில் பழைய இரத்தம் வெளியேறி இயல்பாக உடலில் புதிய இரத்தம் சுரக்க வாய்ப்பாக அமைகிறது. வழக்கமாக  இரத்ததானம் செய்பவர்களுக்கு இரத்தத்திலுள்ள  கொழுப்புச்சத்துகள் குறைவதுடன் இரத்த அழுத்தமும் குறைந்து, இதனால் இருதய மாரடைப்பு நோய்களும் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்தவர்களாக நாம் ஏன் இதனைச் செய்ய வேண்டும்?

இரத்ததானம் செய்வது ஒரு உயிர்தானம் செய்வதற்கு சமமானது. மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது என லேவி. 17:11 ல் பார்க்கிறோம்.  ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை என்றார் இயேசு கிறிஸ்து (யோவான் 15:13).  எனவே கிறிஸ்தவர்களாகிய நாம் தன்னார்வமாக இரத்ததானம் செய்வதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும். தேவனுடைய கிருபையினால் நாம் நல்ல உடல்நிலையில் இருக்கும் போதே தேவையுலுள்ள மற்றவர்களுக்காக இரத்ததானம் செய்ய முன்வர வேண்டும். ஏனெனில், ‘நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே’ (நீதி 3:27) என வேதாகமம் கூறுகிறது.

நாட்டில் பல்வேறு சமூக அரசியல் அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் இரத்ததானத்தை மையமாகக் கொண்டு ஏற்கனவே திட்டங்களை செவ்வனே செயல்படுத்திவரும் வேளையில் கிறிஸ்தவர்களாக நாம் ஒருங்கிணைந்து இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என நம்மில் பலருக்கு மனதில் கேள்விகள் எழும்பாமல் இல்லை. அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கு எழுதின தன் நிருபத்தில், “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்” (கலா. 6:9,10.) என குறிப்பிடுகிறார். கிறிஸ்தவர்களாக நாம் தன்னார்வ இரத்ததானம் என்னும் நன்மை செய்வதில் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கவும், அது அனைவருக்கும் குறிப்பாக நம் கிறிஸ்தவ விசுவாசத்தில் இருப்பவர்களுக்கு தக்க நேரத்தில் உதவியாக அமைந்திடவும், கிறிஸ்தவர்களிடையே இரத்த தானத்தை ஊக்குவிக்கும் ”நல்ல சமாரியன்” அமைப்பு உதவும் என்பதில் எந்த ஐயமும் வேண்டியதில்லை.

18 வயது நிரம்பிய, 50 கிலோவுக்கு குறையாத எடை கொண்ட ஆண், பெண் இருபாலருமே இரத்ததானம் செய்ய முன்வரலாம். மற்றபடிக்கு, தானம் செய்யும் தகுதியும் உடற்பக்குவமும் தங்களுக்கு உள்ளதா இல்லையா என்பதை இரத்த வங்கி சோதனைகள் முடிவுசெய்து கொள்ளும். எனவே, தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிற (பிலி 2:13) தேவன் தாமே நீங்கள் இந்த தருணத்தில் சரியான தீர்மானங்கள் எடுத்து செயல்பட உங்களுக்கு உதவி செய்வாராக.

.
[“நல்ல சமாரியன்” உடன் இணைந்து செயல்பட விரும்புபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்]

Sunday, May 21, 2017

ஆவியின் கனி – நற்குணம்

நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிற தேவனுடைய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். ஆவியின் கனி வரிசையில் நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை (நீதி 19:22) என நாம் கடந்த மாதம் தியானித்தோம். அவ்விதம் நன்மை செய்ய ஒருவருக்கு உள்ளே இருக்கவேண்டிய உள்ளான குணமே நற்குணம். அதைக்குறித்து இப்போது தியானிப்போம். நற்குணம் என்பது ஒருவன் நல்லவனாக இருக்கிற குணம். அது தேவனுடைய குணம். தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லை என இயேசுவும் கூறியுள்ளார். ஆனால் நாம் அவரில் நிலைத்திருக்கும் போது அவருடைய அன்பில் நிறைந்திருக்கும் போது இந்த உள்ளான குணம் நமக்குள்ளும் வளரும்.

நற்குணம் என்ற வார்த்தைக்கு ஆங்கில வேதாகமங்களில் ‘Goodness’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் அந்த வார்த்தை நற்குணம் என்ற வார்த்தையை மட்டுமல்ல, தேவனுடையை நல்லுள்ளம் மற்றும் அவரது நற்செயல்களை குறிக்கும் வண்ணம் கிட்டதட்ட 50 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நற்குணம் என்ற வார்த்தையோ தமிழில் 7 இடங்களில் மட்டுமே வருகிறது. நற்குணம் என்ற ஆவியின் கனியை குறிக்க கிரேக்க மொழியில் பயன்படுத்தபடும் ‘agathosune’ என்ற வார்த்தை ‘அடுத்தவர்களின் நன்மைக்காக ஒருவரின் உள்ளான இருதயத்திலும்  வாழ்க்கையிலும் காணப்படும் உத்தமம்’ என பொருள்படுகிறது. 

ஒருவரில் காணப்படும் நற்குணம் அடுத்தவருக்கு எப்போதுமே நன்மை செய்யவே நாடும். நன்மையான காரியங்கள் என கூறும் போது, பரிசுத்த வேதாகமத்தில் நற்காரியங்கள், நற்கிரியை, நற்கனி, நற்பொருள், நற்சாட்சி, நற்பலன், நற்செய்தி, நற்போதகம், நற்புத்தி போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன். இவற்றுள் நற்குணம், நற்கிரியை, நற்செய்தி என்ற மூன்று காரியங்களுக்குள் மிகவும் நெருங்கிய தொடர்பு உண்டு. தேவனுடைய நற்குணம் அவரது நற்கிரியைகளில் வெளிப்பட்டபோது தான் அது நற்செய்தியாக மக்களுக்கு அறிவிக்கப்பட்டது (லூக்கா 2:10-14).

கிறிஸ்தவர்களாகிய நாம் மற்றவர்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி நற்பலன்களைக் கொடுக்கவேண்டுமெனில், நம்மில் நற்கிரியைகள் காணப்பட வேண்டும். நற்காரியங்கள் செய்யும் ஒருவனை நல்லவன் என எல்லாரும் எப்போதும் சொல்லிவிட முடியாது. நற்காரியங்கள் சில செய்தாலாவது தங்களின் பாவத்திற்கு பரிகாரம் கிடைத்துவிடாதா என்ற எண்ணத்தில் அனைவருமே ஏதோவொரு கட்டத்தில் ஒருசிலருக்காவது நற்காரியங்களை செய்துவிடுகின்றனர். ஆனால் நற்கிரியை என்பதோ ஒருவர் வாழ்வில் அனுதினமும் வெளிப்படுகிற ஒரு காரியம். அது உள்ளான மனிதனின் வெளிப்படையான வெளிப்பாடு. உள்ளான மனிதனில் நற்குணம் பெருகிவரும் போது வெளியில் அது நற்கிரியைகளாக அனுதினமும் வழிந்தோடும்.

’மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது’ என்றார் இயேசு கிறிஸ்து (மத்தேயு 5:16). நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம் (எபேசியர் 2:10). சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார் (ரோமர் 2:7). இவ்விதம் நற்கிரியைகளை நடப்பிக்க நம்மில் நற்குணம் பெருகுவது அவசியமாக இருக்கிறது.

நற்குணம் என்பது அனைவருக்கும் இருக்க வேண்டிய உள்ளான பண்பாக இருப்பினும் அது குறிப்பாக பெண்களுக்கு இருக்க வேண்டிய அல்லது அவர்களிடம் குறிப்பாக எதிர்பார்க்கப்படுகிற காரியமாக இருக்கிறது. நீதிமொழிகள் 12:4 கூறுகிறது, ‘குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்’. மேலும் நீதிமொழிகள் 31:10 ல் ’குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது’ என்றும் காண்கிறோம். பெண்களுக்கான துகுதியுள்ள அலங்கரிப்பைப் குறித்து குறிப்பிடும் போது அப்போஸ்தலனாகிய பேதுருவும், ‘அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது’  என 1 பேதுரு 3:4 ல் குறிப்பிடுகிறார்.

இந்த நற்குணம் நம்மில் பெருகிட நாம் செய்ய வேண்டியதென்ன? அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:11 ல் வாசிக்கிறோம், ‘அந்தப் (பெரோயா) பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்’. நாம் தேவனுடைய வசனங்களை மனவிருப்பத்துடன் தினமும் வாசித்து தியானித்து ஆராய்ந்து அறிந்து அதின்படி நடக்க நம்மை தினமும் அர்ப்பணிக்கும் போது நம்மில் ஆவியின் கனியாகிய நற்குணம் பெருகி அது நம் கிரியைகளில் வெளிப்படும். ஏனென்றால், ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது’ (2 தீமோ. 3:16,17).


நற்குணம் என்பது நாமாக நம்மில் நாமே பெருக்கிக் கொள்ள முடியும் காரியம் அல்ல. அது உள்ளான குணம். அது தேவனுடைய குணம். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது என யாக்கோபு 1:17ல் வாசிக்கிறோம். அவருடைய ஆவியினாலே நாம் உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்பட முடியும் (எபே. 3:16). அது ஒரு நாள் அனுபவம் அல்ல. ’எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது’ என்பது ஆதிவிசுவாசிகளின் அனுபவம் (2 கொரி. 4:16). இந்த அனுபவங்களுக்கு நம்மையும் அர்ப்பணிப்போம்.

ஆமென்.


[இது பாலைவனச் சத்தம் – மே 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]


Sunday, April 23, 2017

ஆவியின் கனி – தயவு

எல்லார் மேலும் தயவுள்ள நம் கர்த்தருடைய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.  நாம் தொடர்ந்து தியானித்து வரும் ஆவியின் கனியில், தயவு என்பது மையப்பகுதியாக ஐந்தாவதாக இருக்கும் அம்சமாக காணப்படுகிறது. தயவு என்பதற்கு பெரும்பாலான ஆங்கில வேதாகமங்களில் Kindness (இரக்கம்) என்ற வார்த்தையும் Gentleness (மென்மை) என்ற வார்த்தையும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு இணையான கிரேக்க வார்த்தைக்கு ‘இருதயத்தில் உருவாகி செயலில் வெளிப்படும் இரக்கம்’ என பொருள்.

நாம் ஒருவரிடம் ஒன்றை செய்யும்படி எதிர்பார்த்து கேட்கும் போது, ‘தயவு செய்து’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். அதை அவரிடமிருந்து எதிர்பார்ப்பதற்கு நமக்கு ஒருவேளை தகுதியும் உரிமையும் இருந்தாலும் கூட, அதனை மறுப்பு எதுவும் இருந்துவிடாமல் உறுதிசெய்து கொள்வதற்காக ’தயவு செய்து’ என்ற வார்த்தையை, நாம் இறங்கி வந்து தாராளமாக பயன்படுத்துகிறோம். ஆனால் தயவு என்பது என்ன? நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை என நீதி 19:22 ல் பார்க்கிறோம். அடுத்தவருக்கு நன்மை பயக்கும் பொருட்டு முழுமனதுடன் செய்யப்படும் செயலை தயை எனலாம்.

தயவு என்பது நம் திரியேக தேவனின் இயல்புகளில் ஒன்று. எனவே தான் அவை நம்மிலும் வெளிப்பட அவர் நம்மை எதிர்பார்க்கிறார். முதலில் நாம் இரட்சிக்கப்பட்டதே முற்றிலும் தேவனுடைய தயவினால் தான். ’நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்’ (தீத்து 3:4,5). நாம் இதற்கு எவ்வளவும் தகுதியானவர்கள் அல்ல (தீத்து 3:3). நாம் இரட்சிக்கப்பட்டது அவருடைய சுத்த கிருபையே. 'கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு' என எபேசியர் 2:8 ல் வாசிக்கிறோம். 

கிருபை என்பதற்கு தகுதியில்லாவதனுக்கு காட்டப்படும் இரக்கம் என ஒரு வரையறை உண்டு.  தயவோ பல நேரங்களில் தகுதியை எதிர்பார்க்கும் (ஆதி 21:23, 2 சாமுவேல் 9:1, லூக்கா 7:4). மட்டுமல்ல, பதிலீடாக ஒன்றைக் கொடுத்தும் ஒருவர் தயையை பெற முடியும். (ஆதி. 34:11). தயை செய்தல் பிரதிபலனாக தயையை எதிர்பார்க்கும் (யோசுவா 2:12) ஆனால் தயவு என்பது தகுதியில்லாதவனுக்கும் கிடைக்கும் (ஆதி. 32:10). தேவனால் மட்டுமே கூடும் உச்சபட்ச தயவை கிருபை எனலாம். ஆனால் தயவு செய்வது என்பது மனிதனாலும் கூடும்.

தயை செய்வது ஒன்றும் தாழ்வான காரியமல்ல. பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம் (நீதி 22:1). அதனால் வரும் பலன்களோ மிகவும் அதிகம் என்பதை பின்வரும் இந்த வசனங்களில் இருந்து தெளிவாக அறிகிறோம். ’தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்து கொள்கிறான்’ (நீதி 11:17). ’தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்’ (நீதி 20:18). ’நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்’ (நீதி 21:21). தேவனுடைய தயவுள்ள கரம் நம்மீது இருக்கும் போது மனிதர்கள் கண்னில் தயவு கிடைத்து நமது காரியங்கள் வெற்றியாய் முடிகிறது (நெகே. 2:8)

நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் ஆவியின் முதல் கனியாகிய அன்பு பெருகும் போது தயவும் வெளிப்படும் (1 கொரி 13:4). ஆவியின் கனியாகிய தயவு நமது வாழ்க்கையில் நிறைவாய் வழிந்தோடுவதற்கு ஆதாரமாக அன்பும், அடையாளமாக மன்னிக்கும் சுபாவமும் நம்மில் பெருகவேண்டும். 'ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்' (கொலோ. 3:12,13). 'ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்’ (எபே. 4:32). ஏசாயா 55:7ன் படி கர்த்தர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.

பலனை எதிர்பார்த்து மட்டுமே நாம் தயவு காட்டக் கூடாது. இருப்பினும் தயை செய்பவனுக்கு அதிகம் தயை செய்யப்படும். ’கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்’ (சங்145:9); இருப்பினும் சங்கீதம் 18:25ன் படி கர்த்தர் தயவுள்ளவனுக்கு இன்னும் தயவுள்ளவராக இருக்கிறார். ‘இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்’ (மத். 5:7) என இயேசுவும் தனது மலைப்பிரசங்கத்தில் கூறியுள்ளார். ’தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவுகிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்’ (ரோமர் 11:22). 

ஆனால் பலனை எதிர்பார்த்து மட்டுமே தயை செய்தால் அது அன்பின் வெளிப்பாடு அல்ல; அது சுயநலத்தின் வெளிப்பாடு. மட்டுமல்ல, தயை செய்வதில் பாரபடசமும் இல்லாமல் இருக்கவேண்டும். உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால்,  உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், அதனால், என்ன பிரயோஜனம்? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே என இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். ’உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே’ (லூக்கா 6:35). 

உபதேசங்களைக் குறித்த வாக்குவாதங்களினால் அல்ல, உண்மைக் கிறிஸ்வர்களின் தயவு நிறைந்த நடவடிக்கைகளினாலேயே  அநேகர் சபைகளுக்குள் இழுக்கப்பட்டுள்ளனர் என்கிறார் வில்லியம் பார்க்ளே என்னும் வேத அறிஞர். இன்று நமது கனிதரும் கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கிறது? தேவ ​​​​​​​தயையை பெற்றுக் கொண்ட நாம் பிரதிபலனாக மற்றவர்களிடம் தயையை காண்பிக்கிறோமா? மற்றவர்களின் மீது தேவ தயவுக்காக ஜெபிக்கிறோமா? (ரூத். 1:8). மற்றவர்களை நாம்  தாராளமாக ஆசீர்வதிக்கிறோமா? (1 சாமு. 23:21). தயவு என்னும் இந்த ஆவிக்குரிய கனி நம்மில் பெருகி, மற்றவர்களை அவரண்டை நடத்திட நம்மை அர்ப்பணிப்போமாக. ஆமென்.


[இது பாலைவனச் சத்தம் – ஏப்ரல் 2017 இதழில் வெளியான எனது கட்டுரை]

Tuesday, April 11, 2017

My 10 Years of Journey as a Blogger

இப்படியொரு பதிவை எழுதும் அளவிற்கு நான் ஒன்றும் பெரிய எழுத்தாளன் அல்ல. இருப்பினும் இறைவன் இயேசு எனக்கு அருளிய நற்கொடைகளை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் உக்கிராணத்துவக் கடமையில் கடந்த 10 வருடங்களாக நான் கடந்து வந்த பாதையினை, ஏப்ரல் 10, 2007 ல் முதல் பதிவுடன் தொடங்கிய எனது பிளாக் இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவுசெய்வதை முன்னிட்டு, இந்த கட்டுரை வழியாக  வாசக நண்பர்களுக்குச் சுட்டிக்காட்டுவதில் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி தான்

வசதி வாய்ப்புகள் இல்லாத ஒரு கிராமத்துப் பின்னணியில் பிறந்து வளர்ந்த எனக்கு இன்று இருக்கும் வசதி மற்றும் வாய்ப்புக்கள் இவையெல்லாம் நினைத்துப் பார்த்தாலே மலைக்கும் அளவிற்கு பெரிய வித்தியாசங்கள் உண்டு. இவையெல்லாம் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிற, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிற (சங்கீதம் 113:7) நம் கர்த்தராலே ஆயிற்று.

எனது சிறுவயது கிராமத்துப் பின்னணியில் எங்கள் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி கூட கிடையாது (எனக்கு திருமணமாகும் வரையிலும் இல்லை); செய்திதாளும் வாங்கும் பொருளாதார நிலைமை இல்லை. சிறுவயதில் தினமும் நான் எங்கள் உறவினரின் மளிகைக்கடையில் சாமான் வாங்கச் செல்லும் போது, பெரியவர்கள் அங்கே கூடிநின்று ஒரே செய்தித்தாளை பங்குவைத்து படித்துக்கொண்டிருப்பது வழக்கம். அந்த  பெரியவர்களுக்கிடையில் நானும் பங்கு போட்டுக் கொண்டு, என் கையில் கிடைத்த அளவில் அன்றாடம் செய்திதாளை படித்து விடுவது உண்டு. சிறுவயதில் எனக்கு இருந்த இந்த வாசிப்பு ஆர்வத்தை அன்று கிண்டலடித்த பெரியவர்கள் பலர் எங்கள் கிராமத்தில் உண்டு.
 
பள்ளி நாட்களில் கலை இலக்கிய நிகழ்வுகளில் நான் எப்படியாவது கலந்து கொண்டு எனது கூச்ச சுபாவத்தை களைய வேண்டும் என எனது இரண்டாவது அண்ணன் எடுத்த முயற்சிகள் பலவும் தோற்றுப் போய், ஒரே ஒரு முறை ஐந்தாம் வகுப்பின் போது பள்ளி ஆண்டுவிழாவின் ஒரு நாடகத்தில் இந்து பூசாரியாக நடித்தது மட்டும் இன்றும் நினைவிற்கு வருகிறது.

வாழ்க்கையில் எப்படியாவது படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற உத்வேகத்தை என் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டதாலும், என் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பினாலும் கர்த்தரின் அநாதி திட்டம் மற்றும் கிருபையினாலும் எனது பொறியாளர் கனவையும் தாண்டி இன்று மருத்துவராக விளங்கிட முடிந்திருக்கிறது.

மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்தும் எனக்கென்று தனிப்பட்ட திறமை தாலந்துகள் இருப்பதாக நான் உணரவில்லை. ’தேவன் எவர் ஒருவருக்கும் எல்லா தாலங்துகளையும் கொடுத்து விடுவதில்லை; எவர் ஒருவருக்கும் ஒரு தாலந்தையாவது கொடுக்காமலும் இல்லை; அந்த தாலந்து எது என்பதை கண்டுபிடித்து அவருடைய நாம மகிமைக்காய்  பயன்படுத்த வேண்டும்என்ற உண்மையையும் உணர்வையும் கல்லூரி நாட்களில் எனக்கு ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய இந்திய நற்செய்தி மாணவர் மன்றம் (EU) மூலம் அடைந்து கொண்டேன்.

அவைகளைக்  கண்டுபிடித்து நிறைவேற்றும் பணியில் நடைமுறையிலும் அதே இயக்கம் தான் எனக்கு உறுதுணையாக இருந்தது. அவற்றுள் ஒன்று தான் எழுதும் தாலந்து. அந்த இயக்கத்தின் மாதாந்திரப் பத்திரிக்கையில் முதன் முதலாக எனது சவாலான சாட்சியை எழுத அதன் ஊழியர் திரு. ராஜபாலன் அவர்கள் என்னை ஊக்குவித்தார். எனது சாட்சியை ஒரு தாளில் எழுதிக்கொடுத்து, அதனை இதழில் பதிப்பாகும் அளவிற்கு திருத்தித் தரும்படி அவரிடம் கொடுத்தால், அவர் அங்கும் இங்குமாக வார்த்தைகளை வெட்டி, ஒட்டி, குத்திக்குதறி திருத்தி எழுதித் தந்து இப்போது இதனை பத்திரிக்கைக்கு அனுப்பி வை என்றார். அப்போது எனது முகம் சுருங்கிப் போனதை உணர்ந்து கொண்ட அவர் எனக்கு பக்குவமாக எடுத்துக் கூறி உற்சாகப்படுத்தி என்னை சமாதானப்படுத்தினார்.

அந்தக் கட்டுரை (தரிசனச் சுடர், நவம்பர் 1995 ல் எனது முதல் கட்டுரை) வெளிவந்த போதோ அதனை வாசித்த பலர் எனது சாட்சியையும் எழுத்து நடையையும் கண்டு என்னைப் பாராட்டி மகிழ்ந்தனர். எனக்கோ உள்ளூர, அது எனது எழுத்து அல்லவே என்ற எண்ணமே மேலோங்கிக் கொண்டிருந்தது. தொடர்ந்து எனக்கு வந்த வாய்ப்புக்களை நான் ஜெபத்துடன் பயன்படுத்திக் கொள்ளவே, நான் (நானாகவே) எழுதிய கட்டுரைகளெல்லாம் அவ்வப்போது அந்த அந்த இதழில் வெளிவந்த வண்ணம் இருந்தன.

கல்லூரி இறுதி நாட்களில் அந்த இயக்கத்தின் வருடாந்திர கூடுகை ஒன்றில், புதிதாய் ஒருவர் தன்னை அறிமுகம் செய்து கொண்டபோது, நானும் பேதுரு தான்; நீங்கள் தான் தரிசுனச்சுடர் பேதுருவா என்றார். ஆம் என்றேன். உங்களை இப்போது தான் முதல் முறையாகப் பார்க்கிறேன். எனது ஆவிக்குரிய வாழ்க்கையில் உங்கள் எழுத்துக்கள் பல எனக்கு உற்சாகமாய்  அமைந்திருக்கின்றன; எனவே நான் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுக்கும் போது எனது இந்து பெயருடன் பேதுரு என இணைத்துக் கொண்டேன் என உணர்ச்சிப் பூர்வமாக கூறினார். ஆண்டவருக்கே மகிமை உண்டாகட்டும். அன்றிலிருந்து எழுதுவது ஆண்டவர் எனக்கு அருளிய தாலந்து; அதனை அவருக்காக முறையாக பயன்படுத்த வேண்டும் என்ற முடிவுக்குள் வந்தேன்.

தொடர்ந்து அவ்வப்போது அந்த பத்திரிக்கையில் எழுதிவந்தேன்பட்ட மேற்படிப்பு வேலூரில் படித்துக் கொண்டிருக்கும் போது, Peter Daniel என்னும் ஒரு அண்ணனுடன் இணைந்துவளாகத்தில் தொடரும் தரிசனம்வளாக ஜெபக்குழுக்களுக்கான நடைமுறைக் கையேடுஎன்ற புத்தகத்தை நானும் அவரும் முறையே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி முடித்தோம். அவை 2004 ல் முறையே UESI-TN மற்றும் UESI நிறுவனத்தின் வெளியீடுகளாக வந்தன. அந்த இயக்கத்தில் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கொய்னோனியா மாநாட்டில் 2004 ல் – Literature Ministry என்ற செமினார் நடத்தும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டதை என் எழுத்துக்கு கிடைத்த அங்கிகாரமாக கருதி தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

2007 ல் உன்னத சிறகுகள் என்ற பத்திரிக்கையில்யோகா - ஒரு கிறிஸ்தவ மருத்துவரின் கண்ணோட்டம்என்ற தலைப்பில் நான் கட்டுரை எழுதியபோது, அது எனது எழுத்துப்பணியை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது. இந்த கட்டுரை டாக்டர், புஷ்பராஜ் அவர்களின் ஜாமக்காரன் பத்திரிக்கையின் மறுபதிப்பாகியதும், அதன் பகுதி தமிழ்க்கிறிஸ்தவர் பக்கங்கள் என்னும் தளத்தில் முகப்பில் (http://www.tamilchristian.com/index.php/hot-topics/yoga-in-tamil)   Hot Topics வரிசையில் இன்றும் இடம்பெற்றிருப்பதும் எனது எழுத்து முயற்சிக்கு கிடைத்த அங்கிகாரமாகவே கருதுகிறேன்.

2006 வரை நான் அவ்வப்போது எழுதி வெளிவந்த கட்டுரைகளை நான் அதுவரையிலும் நான் ஆவணப்படுத்தவில்லை. எனவே இனிவரும் எழுத்துக்களையாகிலும் முறைப்படுத்தலாமே என்ற என்ணத்தில் மிகவும் சாதாரணமாக ஒரு பிளாக்கை ஆரம்பித்து அங்கு என் எழுத்துக்களை சேர்க்க ஆரம்பித்தேன். அந்த கால கட்டத்தில் பிரபலமாக புழக்கத்திலிருந்த தமிழ்க்கிறிஸ்தவர்கள் தளம் (http://www.tamilchristians.com/ - துரதிருஷ்டவசமாக, தற்போது இது பயன்பாட்டில் இல்லை) மற்றும் அங்கு கிடைத்த நட்புகள் இதற்கு தூண்டுகோலாக அமைந்தன. இந்த பத்தாண்டுகளில் ஒரு ஆண்டிலும் கூட இடைவெளி இல்லாமல் பொத்தம் 65 பதிவுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 27 கட்டுரைகள் பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. இந்த பத்தாண்டுகளில் மட்டும் பத்திரிக்கைகளில் வெளிவந்தும் இங்கு இடம்பெறாத கட்டுரைகள் கிட்டதட்ட 10 வரை விடுபட்டிருக்கும். இடையில் வந்த முகநூலின் தாக்கம் இங்கு பிளாக்கில் முறையாக எழுதவேண்டிய அவசியம் இல்லாமல் ஆக்கிவிட்டது. இருப்பினும் பிளாக்குக்கு என்று ஒரு தேவை தொடர்ந்து இருப்பதாகவே எனக்கு தென்படுகிறது.

இந்த அளவிற்கு எழுத எனக்கு வாய்ப்புகளை அருளிய தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். இந்த பத்தாண்டுகளில் எனக்கு இருந்த ஒரு மோசமான பழக்கம் என்னவென்றால், இதுவரை எந்தவொரு பத்திரிக்கைக்கும் கூட, பிரசுரம் ஆகவேண்டும் எனபதற்காக நானாக எனது கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவில்லைவெளியான கட்டுரைகள் அனைத்துமே, அந்தந்த பத்திரிக்கை குழுவினால் என்னிடம் கேட்டு வாங்கப்பட்ட கட்டுரைகள் அல்லது என்னை அவர்கள் உற்சாகப்படுத்தி, அதனால் எழுதிய கட்டுரைகள் மட்டுமே.

எனவே, காலத்தின் கோலத்திற்கேற்ப, தேவைகளை உணர்ந்து அவசியமான கட்டுரைகளை நானாக எழுத வேண்டும் என்ற உணர்வு இந்த பத்தாண்டு நிறைவு தினத்தில் என்னுள் அதிகமாய் பெருகி வருகிறது. எனது Ph.D இறுதியாண்டுக்கான பணிச்சுமைகள் அதிகமாக இருப்பதால், இந்த வருடம் எனது பிளாக் பதிவுகளில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாது இருப்பினும், வரும்காலங்களில் இவைகளை முறைப்படுத்தி தேவமகிமைக்காய் தொடர்ந்து எழுத விரும்புகிறேன். தங்களின் மேலான ஜெபம், ஆலோசனை மற்றும் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.